அவருக்கு அமைச்சர் பதவி..! அனைவர் முன்னிலையில் முதலமைச்சரை மிரட்டிய சாமியார்! அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ!

முதலமைச்சர் எடியூரப்பாவை மடாதிபதி ஒருவர் மிரட்டிய சம்பவமானது கர்நாடகா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலத்தில் தாவண்கிரேவில் லிங்காயத் சமூகத்தினர் சார்ந்த நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பஞ்சமாசாலி மடாதிபதியான வச்சானந்தா சுவாமி பேசியபோது பல சர்ச்சைகள் எழுந்தன. அவர் பேசியபோது, "லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான முகேஷ் நிரானிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்றால், கர்நாடக பாஜக அரசு லிங்காயத் சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த ஆதரவையும் இழக்க நேரிடும் என்று மிரட்டினார்.

இதைக்கேட்ட எடியூரப்பா பேரதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுபோன்ற மிரட்டல்களுக்கு மத்தியில் தன்னால் பணியாற்ற இயலாது என்று மேடையிலேயே கூறினார். பின்னர் மடாதிபதியின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் அங்கிருந்து புறப்பட தொடங்கினார். பின்னர் மடாதிபதி அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

பின்னர் தான் முதலமைச்சராவதற்கு காரணமான 17 சட்டமன்ற உறுப்பினர்களுக்காக அனைத்தையும் பொறுத்து கொண்டிருப்பதாகவும், இல்லையேல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லக்கூட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவமானது அந்த நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.