பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மௌனி ராய் கடலோரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு தன்னுடைய நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார்.
ஊரடங்கு ரொம்ப போர்..! ஆனாலும்..? நாகினி நடிகை வெளியிட்ட நீச்சல் உடை புகைப்பட தொகுப்பு உள்ளே..!

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மௌனி ராய். இவர் நாகினி சீரியலில் நடித்து ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.இவர் எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆவார். அந்த வகையில் நடிகை மௌனி ராய் தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே தன்னுடைய நாட்களை கழித்து வருகிறார்.
நடிகை மௌனி ராய் தான் கடலோரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரசிகர்களுடன் நினைவுகளாக பகிர்ந்திருக்கிறார். நடிகைக்கு பிடித்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மௌனி ராய் அந்த புகைப்படங்களில் நீளம் மற்றும் மஞ்சள் நிறம் கலந்த பிகினி உடையை அணிந்து இருக்கிறார்.
கடலோரக் குடிசைகள் மற்றும் பனை மரக்கட்டைகளுடன் வரிசையாக அமைத்து கடலோரப் பகுதியில் குளிர்ச்சியை கொண்டாடி விளையாடும் நடிகையை அந்த புகைப்படத்தில் நம்மால் காண இயலும். அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படங்களை வெளியிட்ட மௌனி ராய் அதற்கு கேப்சனாக, இந்த புகைப்படங்கள் என்னுடைய மனதுடைய குணங்களை அழகாக வெளிப்படுத்துகின்றன என்று கூறியிருக்கிறார்.
நாகினி, டெவோன் கே தேவ்… மகாதேவ் மற்றும் கியுங்கி சாஸ் பீ கபி பாஹு தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை மௌனி ராய் நடித்தது மூலமாக மிகவும் பிரபலமான நபராக வலம் வந்தார். அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில், கோல்ட், ரோமியோ அக்பர் வால்டர் ஆகியோருக்கு நிகரான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இந்தியாவை ஊரடங்கு உத்தரவில் முடங்கிக் கிடக்கும் நிலையில் நடிகை பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது மேலும் அவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து பலவிதமான கமெண்ட்களையும் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.