தான் படித்த பள்ளியின் மேடையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் மண்டியிட்டு வணங்கிய சம்பவமானது தமிழக அரசியலில் வைரலாகி வருகிறது.
தான் படித்த பள்ளியின் மேடையில் விழுந்து வணங்கிய ஜெயக்குமார்! நெகிழ வைத்த காரணம்!!

தமிழகத்தின் மீன்வளத்துறை அமைச்சராக ஜெயக்குமார் அவர்கள் பதவி வகித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ராயபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார். நேற்று அவர் தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை மேற்கொண்டார்.
கே.சி.சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளி, முருக தனுஷ்கோடி மகளிர் மேல்நிலை பள்ளி, பி.ஏ. கே பழனிச்சாமி பள்ளி என்ற 3 பள்ளிகளில் இந்த திட்டத்தை நிறைவேற்றினார். அமைச்சர் ஜெயக்குமார் கே.சி. சங்கரலிங்க நாடார் மேல்நிலை பள்ளியில் படித்தவர் ஆவார். அப்பள்ளிக்கு சென்றபோது அரங்கேற்றப்பட்ட மேடையில் மண்டியிட்டு வணங்கினார்.
அங்கு அவர் நீண்ட நேரம் மாணவர்களிடையே கலந்துரையாடினார். மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்ட அவர், சரியான பதிலளித்த மாணவர்களுக்கு 500 ரூபாய் பரிசு வழங்கினார். பின்னர் அங்கிருந்த வகுப்பறைகளுக்கு அவர் சென்றார். அங்குள்ள மாணவர்களுக்கு அவர் கரும்பலகையில் பாடம் நடத்தினார்.
தங்கள் பள்ளியில் இருந்து அமைச்சரான ஜெயக்குமாரை கண்டு மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.