உருளைக் கிழங்கின் மருத்துவ பயன் அறிவீர்களா?

உருளைக் கிழங்கினை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் வாயு தொல்லை அதிகரிக்கும், கை கால் மூட்டுகளில் வலி உண்டாகும் என்பதால் அதை ஒரு வயதுக்கு மேல் தவிர்த்து விடுகிறோம்.


ஆனால் இதே உருளைக்கிழங்கில் மருத்துவத்தன்மையும் உள்ளது. 

பொதுவாக உருளைக் கிழங்கைச் சமைக்கும்போது அதன் தோலை நீக்காமல் சேர்த்துக்கொள்ளவேண்டும்  அப்படி செய்தால் வாயு தொல்லை குறையும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலினை தனியாக எடுத்து நீர்விட்டு காய்ச்சி கஷாயம் போல் குடித்துவர மூட்டு வலிகள், முதுகு வலிகள் குணமாகும்.  இதன் இலை, கிழங்குகள் மருத்துவப் பொருளாகவும் உணவாகவும் பயன் படுத்தப்படுகின்றன.

உருளைக்கிழங்கு சிறுநீரை மிகுதியாக போக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு பாலை அதிகரிக்கச் செய்யும்.  நாட்பட்ட இருமல் நோயால் தூக்கமில்லாதிருப்பவர்கள் இதன் இலைச்சாற்றை குடித்தால் தூக்கம் நன்றாக வரும்.  உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து எடுத்து தடவினால் தீக்காயங்களும் குணமாகும். 

முகம் பொலிவு பெறவும் உருளைக்கிழங்கை பயன்படுத்துகிறார்கள்.