செய்வினை என்றால் என்ன? ஒருவருக்கு செய்வினை இருப்பதை எப்படி கண்டறியலாம்?

செய்வினை இப்பவும் எல்லாராலும் நம்பப்படுகிறது. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நமது முன்னேற்றத்தை தடுக்க வைக்கப்படும் மாந்தீரிக செயல்தான் செய்வினை.


செய்வினை என்பது தீய சக்திகளை குவியலால் வரச் செய்து அதனை பிடிக்காதவர்கள் மீது ஏவச் செய்வதுதான். அந்த தீய சக்திகள் அடுத்தடுத்து கெடுதலை அந்த நபரின் மீது தாக்குதல் நடத்துகின்றன.

இந்த உலகம் மிகவும் போட்டி நிறைந்தது. அதில் ஒருவர் முன்னேறுவதற்கு எந்த அளவுக்கு வழி தேடுகிறார்களோ, அதே அளவுக்கு ஒருவரின் முன்னேற்ற தடுக்கவும் வழியை கண்டுபிடித்துவிடுவார்கள். அதில் முக்கியமானது செய்வினை. இந்த செய்வினையானது நமது ஜாதகம் நன்றாக இருந்தாலும் நல்ல நேரம் கூடி வந்தாலும் எந்த நல்ல காரியத்தையும் நம்மால் செய்ய முடியாது. அப்படிப்பட்ட செய்வினையை எப்படி கண்டறிவது என தற்போது பார்க்கலாம்.

ஒரு நபரின் முடி, துணி அல்லது உடலோடு ஒட்டியிருக்கும் பொருளைக் கொண்டு செய்வினை வைப்பார்கள். அந்த நபரின் புகைப்படத்தைக் கூட வைத்து செய்வினை செய்ய முடியுமாம். தனக்கு விருப்பமில்லாத ஒருவன் எல்லா வழிகளிலும் கெட்டு அழிந்து போக செய்ய வேண்டி செய்யப்படும் மாந்திரிக முறையே செய்வினை எனப்படுகிறது. மிகவும் கொடுமையான மாந்திரிக முறைகளில் இதுவும் ஒன்று. மந்திர சக்தியூட்டப் பட்ட பொருட்களை ஒருவரின் இருப்பிடத்தில் அவருக்கு தெரியாமல் வைத்து வைத்து அதன் மூலமாக அவருக்கு கெடுதல் செய்வதே இந்த செய்வினை.

இப்படி ஒருவர் நமக்கு செய்வினை வைத்திருந்தால், நமது தலை வலிக்கும். உண்ணும் உணவு வயிற்றில் தங்காது. உடல்நலம் சோர்வாக காணப்படும். வீட்டில் எந்தவித நல்ல காரியமும் செய்ய முடியாது. கடவுளை வணங்க முடியாது. குலதெய்வ வழிபாட்டிற்கு பயணம் செய்ய முடியாது. உடல்நலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்.

ஆனால், மருத்துவரிடம் சென்றாலும் அது சரியாகாது. காரணமில்லாமல் மூட்டு, எலும்புகளில் வலி உண்டாவது. தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பது. மருத்துவக் காரணம் ஏதுமில்லாமல், முடி ஏராளமாகக் கொட்டிப்போவது. உடலில் எந்த பிரச்னையும் இல்லாதபோதும் நகங்கள் மட்டும் கருத்துப் போவது. திடீரென சம்பந்தமே இல்லாமல் தற்கொலை எண்ணம் தோன்றுவது. இந்த பிரச்சினைகள் இருந்தால் உங்களுக்கு யாரோ செய்வினை வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.

இந்த பிரச்சனைகளை தவிர்க்க எந்த வித மாந்திரீக செயலையும் செய்ய வேண்டாம். அதன் மூலம் உங்கள் பணம்தான் வீணாகும். தவிர அந்த செய்வினை தீராது. முறையாக உங்கள் ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் கொண்டு போய் கொடுத்து அவர் என்ன கூறுகிறாரோ அந்த பரிகாரத்தை செய்யுங்கள். அப்படி இல்லை என்றால் துர்க்கை அம்மனுக்கு குருதி பூஜை செய்தால் நம் வாழ்வு சரியாகிவிடும்.

அதாவது, துர்க்கை அம்மன் படத்தை பூஜை அறையில் வைத்து தண்ணீரிலோ அல்லது பன்னீரிலோ குங்குமத்தை கரைத்து ஒரு பாத்திரத்தில் வைத்து இருக்க வேண்டும். பின் உதிரி பூக்களை ஒரு தட்டில் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் 108 துர்க்கை அம்மன் துதிகளை கூறி இந்த பூக்களை எடுத்து குங்குமம் கலந்த தண்ணீரில் நனைத்து துர்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்யவேண்டும்.

108 துதிகள் தெரியாதவர்கள் ஓம் துர்க்கை அம்மன் போற்றி என்ற மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்யலாம். இதனை தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை செய்யலாம். தினமும் செய்ய முடியாதவர்கள் வாரத்தில் இரண்டு முறையாவது இதனை செய்யலாம். இந்த பூஜையை செய்து துர்க்கை அம்மனை வணங்கினால் நமக்கு வைத்திருக்கும் செய்வினைகள் தவிடுபொடியாகும்.

காயத்ரி மந்திர ஜெபம் செய்பவர்களிடம் இந்த அபிசார வித்தைகள் அணுகாது. சந்திரனுக்கு அதிதேவதையான அம்பாள் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, வலம்புரி சங்கு, பசு இவற்றை பூஜிப்பவர்கள் ஆகியவர்களை கெட்ட சக்திகள் நெருங்குவதில்லை.