ச்சீய், இப்படியும் ஒரு அண்ணனா..? அப்பாவி தங்கையை கர்ப்பமாக்கிய கொடூரம்

காமவெறி கொண்ட அண்ணன் சொந்த தங்கை என்றும் பாராமல் அவரை கற்பழித்து கர்ப்பமாக்கிய சம்பவமானது பந்தலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள மலப்புரம் எனும் இடத்தை சேர்ந்தவர் முர்ஷித். இவருடைய வயது 22. நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள பந்தலூர் என்னும் இடத்தில் இவருடைய உறவினர்கள் வசித்து வருகின்றனர். அவர்களை பார்ப்பதற்காக முர்ஷித் அடிக்கடி இங்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்போது அவருக்கு அடுத்து வரும் தன்னுடைய பெரியப்பாவின் மகளுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முர்ஷித் அந்தப் பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்துள்ளார். மேலும் இந்த செய்தியை யாரிடமாவது வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வந்துள்ளார்.

இதனால் பயந்துபோன அந்த பெண், யாரிடமும் தெரிவிக்காமல் மூடிமறைத்து உள்ளார். இதனிடையே அந்தப் பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர் அவரை தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்து சென்றனர். 

அந்த மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பம் அடைந்திருப்பதாக அவருடைய பெற்றோரிடம் கூறியுள்ளனர். கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து தங்கள் மகளிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது அந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த இன்னல்களை தன்னுடைய பெற்றோரிடம் விவரமாக கூறியுள்ளார். உடனடியாக பெற்றோர் பந்தலூர் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து சென்றனர். முர்ஷித்தை தேடி கண்டுபிடித்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். முர்ஷித் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.