மனைவி குளிப்பதற்காக பாத்ரூம் சென்ற நேரம்..! 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற்பட்ட பயங்கரம்! நெஞ்சை உலுக்கிய சம்பவத்தின் பின்னணி!

பிரித்தானியாவில் வசித்து வரும் இலங்கை தமிழர் ஒருவர், மனைவி குளிக்கப்போன நேரத்தை சாதகமாக பயன்படுத்தி தன் மகனையும் மகளையும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இலங்கை தமிழரான நடராஜா நித்தியகுமார் (வயது 40), கிழக்கு லண்டனில் உள்ள இல்போர்டில் அமைந்திருக்கும் குடியிருப்பில் தன் மனைவி, மகள், மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் விகாஷ் என்ற மகனும், 19 மாத வயதில் பாவண்யா என்ற மகளும் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதியன்று மாலை 6 மணி அளவில், நடராஜா நித்திய குமார் தன் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்திருக்கிறார்.

அந்நேரத்தில் அவரது மனைவி குளிப்பதற்காக பாத்ரூமிற்குள் சென்று விடுகிறார். அந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த நடராஜா நித்திய குமார், தன் கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி பச்சிளம் குழந்தையை தன் மகளையும் மூன்று வயது தன் மகனையும் கொடூரமாக குத்தி கொலை செய்திருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே அவரது மகள் உயிரிழந்திருக்கிறார். பின்னர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரது மகனும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். 

தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் நடராஜா நித்திய குமார் விசாரணையில் கூறியிருக்கிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக படுகாயங்களுடன் அவர் உயிர் தப்பியிருக்கிறார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தான் பெற்ற குழந்தையை கொலை செய்த நடராஜா நித்திய குமாரை போலீசார் கைது செய்தனர். அவரை ஓல்ட் டெல்லி நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக நேற்றையதினம் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தினர். 

அரசு தரப்பு வக்கீல், நடராஜா நித்திய குமார் மீது 2 கொலை குற்றங்களை சுமத்தி வாதிட்டார். மேலும் இவர் மீது இரண்டு குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிகெல் நிக்லே இந்த வழக்கின் மறு விசாரணை வரும் ஜூலை 28ஆம் தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டிருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.