இப்ப தான் கல்யாணம் முடிஞ்சது! அதுக்குள்ள வாந்தியா? புகுந்த வீட்டுக்கு புறப்பட்ட மணப் பெண் செய்த காரியம்!

திருமணமான 3 நாட்களிலேயே புதுமணப்பெண் ஆற்றிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்பிரசாத். இவருக்கு 3 நாட்களுக்கு முன்னர் அஞ்சு சைனி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதியினர் உறவினர்களுடன் மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள ஷியோபூர் என்ற இடத்திற்கு வருகை தந்தனர். சாம்பல் ஆற்று பாலத்திற்கு மேலே சென்று கொண்டிருந்தனர். 

அப்போது அஞ்சு தனக்கு வாந்தி வருவதாக கூறியுள்ளார். உடனடியாக உறவினர்கள் வாகனத்தை நிறுத்தினர். அப்போது எதிர்பாராத வகையில், புதுமணப்பெண் ஆற்று பாலத்திற்கு மேலிருந்து ஆற்றுக்குள் குதித்துவிட்டார். உறவினர்கள் யாருக்கும் நீச்சல் தெரியாத காரணத்தினால் அவர்களால் உடனடியாக குதித்து காப்பாற்ற இயலவில்லை.  பதறிப்போன உறவினர்கள் உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஆற்று விழுந்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஆற்றுப்பாலத்தில் இருந்து ஏன் அந்த பெண் கீழே குதித்தார் என்பது பற்றியும் விசாரித்து வருகின்றனர். ஒருவேளை தற்கொலை முயற்சியாக இருக்கக்கூடும் என்ற வியூகத்தில் பெண்ணின் உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையும் அஞ்சுவின் விருப்பத்திற்கு ஏற்றவாறு திருமணம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. திருமணமான 3 நாட்களுமே அஞ்சு மகிழ்ச்சியாகவே இருந்து வந்ததாக இருவீட்டாரும் கூறியுள்ளனர். தொடர்ந்து தற்கொலைக்கு காரணம் தெரிந்து கொள்வதற்காக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.