TNPL லில் மதுரை காரங்க தான் கிங்! மீண்டும் நிரூபிதது காட்டிய அருண் கார்த்திக்!

TNPL தொடரின் நேற்றைய போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


முதலில் பேட்டிங் செய்த TUTI PATRIOTS அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களை எடுத்தது. அந்த அணியின் அக்ஷய் ஸ்ரீனிவாசன் அதிகபட்சமாக 55 ரன்களை எடுத்தார். மதுரை பாந்தர்சின் கிரண் ஆகாஷ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை கைப்பற்றினார். 

125 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அந்த அணியின் அருண் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 65 ரன்களை விளாசினார். சரத் ராஜ் 33 ரங்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் மதுரை பாந்தர்ஸ் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. 

65 ரன்களை விளாசிய அருண் கார்த்திக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.