எம்எல்ஏ தேர்தல்! பாஜக வேட்பாளரான டிக்டாக் அழகி! உற்சாகத்தில் தொண்டர்கள்!

ஹரியானா மாநிலத்தில் டிக்டாக் மூலம் பிரபலமான பெண் ஒருவருக்கு பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் 21ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ம் தேதி வெளியிடப்படுகிறது.  

டிக் டாக் செயலியின் மூலம் ஆடிப் பாடி பிரபலமடைந்த சோனாலி போகத் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு டிக் டாக் செயலியில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் சோனாலி போகத்துக்க தேர்தலிலும் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் பாஜக அவருக்கு எம்எல்ஏ சீட் வழங்கியுள்ளது.

இதையடுத்து ஹரியானா மாநிலம் ஆதம்பூர் சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ வேட்பாளராக களமிறங்குகிறார் சோனாலி போகத். இதுகுறித்து கூறிய சோனாலி போகத், தொகுதி மக்களைக் கவர டிக் டாக் செயலியின் மூலமாகவும் பிரச்சாரத்தை செய்வேன் என்று கூறினார். குறிப்பாக தேசபக்தி சம்பந்தமான வீடியோக்களை வெளியிடப்போவதாகவும், சமூக நலன்களைக் குறித்த கருத்துக்களை மக்களிடையே கொண்டு சேர்க்க போவதாகவும் சோனாலி தெரிவித்துள்ளார். 

அமேதி தொகுதியில் பிரதமர் வேட்பாளரான ராகுல்காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி ராணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.