சினிமா வாய்ப்பு தருவதாக கூறி ஆடைகளை களைந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்து மிரட்டுவதாக சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்களுக்கு நடிகர், நடிகைகளை ஒப்பந்தம் செய்து கொடுக்கும் காஸ்டிங் மோகன் மீது ஏராளமான மாடலிங் பெண்கள் புகார் அளித்து வருகின்றனர்.
சினிமா வாய்ப்புக்காக ஆடைகளை களைந்த நடிகைகள் வீடியோ! காஸ்டிங் மோகன் மீது குவியும் புகார்!
கடந்த வாரம் YouTube மற்றும் வாட்ஸ் ஆப்பில் இளைஞர் ஒருவர்பெண்கள் பலருடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகின. மேலும்பெண்கள் சிலர் தங்களின் ஆடைகளை களைந்து நடனம் ஆடுவது போன்றும், ஒரே நேரத்தில்இரண்டு பெண்களுடன் இளைஞர் ஒருவர் நெருக்கமாக இருப்பது போன்றும் வீடியோ ஆன்லைனில்பரவின.
அந்த வீடியோவில்இருக்கும் பெண்கள் சினிமா துணை நடிகைகள் என்றும் மாடலிங் துறையில் இருப்பவர்கள்என்றும் கூறப்பட்டது. மேலும் வீடியோவில் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் இளைஞர்காஸ்டிங் மோகன் என்று கூறப்பட்டது. காஸ்டிங் மோகன் தான் தமிழ் திரையுலகின் முன்னணிகாஸ்டிங் நபராக கருதப்படுகிறார். அதாவது சினிமா படப்பிடிப்பு மற்றும் சின்னத்திரைபடப்பிடிப்பிற்கு நடிகர், நடிகைகளை ஏற்பாடு செய்து தரும் வேலையை செய்து வந்தவர்தான் இந்த காஸ்டிங் மோகன்.
அந்த வகையில் பெண்கள்பலர் காஸ்டிங் மோகனுடன் நெருக்கமாக பழகி சினிமா வாய்ப்புகளை வாங்கி வந்ததாககூறப்படுகிறது. சில பெண்களிடம் நெருக்கமாக பழகிவிட்டு காஸ்டிங் மோகன் அவர்களுக்குவாய்ப்பு பெற்றுத்தரவில்லை என்ற சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்தே பாதிக்கப்பட்டபெண் ஒருவர் காஸ்டிங் மோகன் பெண்களுடன் சல்லாபத்தில் இருக்கும் வீடியோவைவெளியிட்டதாக கூறப்படுகிறது.
பெண்கள் யாரும்புகார் அளிக்காத காரணத்தினால் காஸ்டிங் மோகன் மீது எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் திடீர் திருப்பமாக சென்னை மாநரக காவல் ஆணையர்அலுவலகத்திற்கு ஏராளமான மாடலிங் பெண்கள் மற்றும் துணை நடிகைகள் வந்தனர். அவர்கள்அனைவருமே தங்களை ஏமாற்றி காஸ்டிங் மோகன் வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும், அதனைவெளியிடப்போவதாக சிலர் தங்கள் மிரட்டுவதாகவும் புகார் அளித்தனர்.
இதனிடையே சினிமாவாய்ப்புக்காக தாங்கள் சிலவற்றை விட்டுக் கொடுத்ததாகவும் ஆனால் அதனை வைத்தே சிலர்தங்களை மிரட்டுவதாகவும் மாடல் அழகிகள் கூறிய குற்றச்சாட்டு கமிஷ்னர் அலுவலகத்தில்பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து காஸ்டிங் மோகன் தொடர்புடைய வீடியோவைவெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
முதற்கட்டமாககாஸ்டிங் மோகனை விசாரணைக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காஸ்டிங்மோகன் தெரிந்தே சில பெண்களை வீடியோ எடுத்திருப்பதும், சில வீடியோக்கள் காஸ்டிங்மோகனுக்கே தெரியாமல் எடுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில்மேலும் யாருக்கு தொடர்பு உள்ளது, எத்தனை பெண்கள் காஸ்டிங் மோகனிடம் ஏமாந்துள்ளனர்என்றெல்லாம் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது.