கார் மீது லாரி மோதியதில் சம்பவயிடத்திலேயே 3 பேர் உயிரிழந்த சம்பவமானது அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசுர வேகம்! எதிரோ டிப்பர் லாரி! நொடியில் அப்பளமான சொகுசு கார்! கோவிலுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த பயங்கரம்!

கர்நாடகா மாநிலத்தில் கோலார் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இதற்கருகே உள்ள மாலூருக்கு உட்பட்ட மாஸ்தி எனும் கிராமத்தை சேர்ந்தவர்கள் நாராயணசாமி, முனிராஜ், சுப்ரமணியன், ரவிக்குமார். இவர்களுடைய மகன்களான ஆனந்த்குமார் (30) அணில்குமார் (26), ஸ்ரீகாந்த் (24), நந்தகுமார் (24), ஜோசாந்த் (18) ஆகியோர் நெருங்கிய நண்பர்களாவர்.
இவர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பேரிக்கை கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் (26) மற்றும் நாகேந்திரன் (28) ஆகியோரும் நண்பர்களாவர்.
7 இளைஞர்களும் இணைந்து பெங்களூருவிலிருந்து திருநள்ளாரில் சமயங்கள்ல கோவிலில் பௌர்ணமி பூஜையை பார்த்து வருவதற்காக காரில் புறப்பட்டு சென்றனர். ஆனந்த்குமார் காரை ஓட்டி சென்றார்.
நேற்று அதிகாலையில் அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தழுதாழை கிராமத்துக்கு அருகே சென்னை- கும்பகோணம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காருக்கு எதிரே டிப்பர் லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதனை கண்ட ஆனந்த்குமார் செய்வதறியாது திகைத்தார்.
எதிர்பாராவிதமாக டிப்பர் லாரி விரைந்து வந்து காரின் மீது மோதியது. மோதிய அதிர்ச்சியில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஆனந்த்குமார், அவருடைய தம்பி அனில்குமார் மற்றும் நாகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடும் நிலையிலுள்ள 4 பேரையும் ஜெயங்கொண்டான் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் முதலுதவிக்கு பின்னர் அவர்களை தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு மேல்சிகிச்சைக்காக இடம் மாற்றினார். இறந்த 3 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கு காரணமான ஓட்டுநரை தேடி வந்தனர். ஒருவழியாக காவல்துறையினர் அந்த ஓட்டுநரை கண்டுபிடித்தனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள நங்குடி கிராமத்தை சேர்ந்த காந்தி என்பவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவமானது அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.