வாய்த் துர்நாற்றம் போக்கும் இலவங்கப்பட்டை

உணவுக்கு சுவை கூட்டும் பொருளாக மட்டுமே பயன்படுத்தப்படும் இலவங்கப்பட்டையில், உடல் நலம் அதிகரிக்கும் மருத்துவத் தன்மையும் அதிகமாகவே அடங்கியிருக்கிறது.


·          இலவங்கப்பட்டையை அரைத்து சமையலில் சேர்த்துக்கொண்டால், செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும். வாய்த் துர்நாற்றம் போக்கும்.

·         சளித்தொல்லையால்  வறட்டு இருமலுக்கு ஆளாகுபவர்கள்,  இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்புகிராம்பு சேர்த்து கொதிக்கவைத்து கஷாயமாக குடித்தால் இதமாக இருக்கும்.

·         இந்த கஷாயம் உடலுக்கு புத்துணர்வு தருவதுடன் நரம்புக்கு வலிமையும் ஜீரணத்துக்கு உதவியும் செய்கிறது.