காங்கிரஸ் வேட்பாளருக்கு மண்டையில் 11 தையல்! என்னாச்சுன்னு தெரிஞ்சா அதிர்ந்து போவீங்க!

புத்தாண்டு விஷூ பண்டிகை கேரளாவில் வெகு விசேஷமாக கொண்டாடப்பட்டது.


திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் காந்தாரிஅம்மனுக்கு நேர்த்திக்கடன் பாக்கி வைத்திருந்தாராம். அதனை நிறைவேற்றுவதற்காக வருகை தந்தார். துலாபாரம் தராசில் சசிதரூர் அமர்ந்தார். அவருக்கு இணையாக காசு வைக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், வாழைப்பழம் வைக்கப்பட்டது. இதைக் கண்டதும் காங்கிரஸ்காரர்கள் சிரிப்பை அடக்கிக்கொண்டார்கள்.

சந்தோஷாமாக வாழைப்பழம் வைப்பதை பார்த்துக்கொண்டிருந்தார் சசி தரூர். திடீரென தராசு சங்கிலி அறுந்துவிழ, பொத்தென்று கீழே விழுந்த சசி தரூர் மீது தராசு விழுந்தது. தலையில் ரத்தம் கொட்டத் தொடங்கியது.

உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு 11 தையல்கள் போடப்பட்டுள்ளன. இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார் என்றாலும் ஏதோ தெய்வ குத்தம் என்று பயந்துபோயிருக்கிறார். இதை மோடியின் சதி என்று சொல்லாத வரை சரிதான்.