காசி மேட்டரை முடித்த பிறகு தினேஷ்..! நாகர்கோவில் பெண்கள் வழக்கில் வெளியான பகீர் தகவல்!

பல்வேறு பெண்களின் கற்பை சூறையாடிய காசி அளித்த வாக்குமூலத்தின் பேரில் அவருடைய நண்பர் கைது செய்யப்பட்டிருப்பது வழக்கில் திருப்புமுனையாக அமைந்துள்ளது.


கடந்த 2 மாதங்களாக சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரெண்டிங்காகி இருப்பவர் காசி.இவர் சமூக வலைத்தளங்களில் பல பெண்களிடம் தன்னை பாடி பில்டர் என்றும், பணக்காரர் என்றும், மிகப்பெரிய தொழிலதிபர் என்றும் அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். அவர்களை கவரும் வகையில் சமூக வலைத்தளங்களில் டிக்டாக் வீடியோக்களில் செய்து வந்தார்.

தன்னுடன் உல்லாசமாக இருக்க ஒப்புக்கொள்ளும் பெண்களுடன் இருக்கும் தருவாயில், அவர்களுக்கே தெரியாமல் அந்தரங்க காட்சிகளை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார். எடுத்தது மட்டுமின்றி அவற்றை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளார். 

மேலும் தன்னுடன் இணக்கமாக இருக்க ஒப்புக் கொள்ளும் பெண்களை தன்னுடைய பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தனது லேப்டாப்பில் சேமித்து வைத்துள்ளார். 

இந்நிலையில் இவர் ஒரு மருத்துவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அந்த மருத்துவர் நாகர்கோவிலை சேர்ந்தவர். தன்னுடைய அந்தரங்கம் சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து அவர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.தன்னிடமிருந்து 7 லட்ச ரூபாயையும் காசு பறித்துக் கொண்டதாக அந்த மருத்துவர் புகாரளித்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணையில் காசி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த செய்தியானது கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலானது‌. 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது, காசியின் வீட்டை பரிசோதித்தபோது 2 ஹார்ட் டிஸ்க்குகள், 7 ஏடிஎம் கார்டுகள் முதலியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் காசிக்கு உடந்தையாக 4 நண்பர்கள் இருந்துள்ளனர். பிரபல நடிகரின் மகளும் காசியின் வலையில் சிக்கியுள்ளது காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும், பெரும் அரசியல்வாதிகளுக்கும் இதில் சம்பந்தமிருப்பதை காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் பள்ளி மாணவிகள் கூட காசியின் வலையில் சிக்கி சீரழிந்தது குறிப்பிடத்தக்கது. அத்தகைய பள்ளி மாணவிகளும் உதவி ஆய்வாளரின் மகளொருவர் சிக்கி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அதுமட்டுமின்றி காசிக்கு எதிராக புகார் கொடுக்க நினைக்கும் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆன்லைன் மூலமாகவும் புகார் தரலாம் என்று காவல்துறையினர் கூறினர். அதன்படி காசியால் பாதிக்கப்பட்டு தற்போது வெளிநாட்டில் வசித்துவரும் பெண்ணொருவர் புகார் அளித்துள்ளார். "காசியால் பாதிக்கப்பட்ட பெண்களில் நானும் ஒருவர். ஆனால் நான் தற்போது வெளிநாட்டில் உள்ளேன். இந்த புகாரானது கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினரிடம் செல்ல வேண்டும். காசி சாதாரண ஆளில்லை. அவன் ஒரு குரூப்பாக இந்த கொடுமைகளை செய்து வருகிறான். அவனுடைய கூட்டாளிகளையும் விட்டுவிடாமல் அனைவரையும் தண்டிக்க வேண்டும்" என்று கூறினார்.

சில நாட்களுக்கு நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது இன்னும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் காசி நீல நிற சட்டை மற்றும் வேட்டி அணிந்து கொண்டு நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மேலும் அவர் முகக்கவசம் அணிந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்கள் அவருடைய முகத்தை படம் பிடிக்க சென்றபோது எந்த ஒரு தயக்கமும் இன்றி காதல் சின்னத்தை காட்டியுள்ளார். எப்படிப்பட்ட கேவலமான குற்றத்தை செய்துவிட்டு எந்தவித பயமும் இன்றி முகத்தை காட்டிய காசியை பலரும் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர். 

இந்நிலையில் 3 நாட்கள் காசியை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அவ்வாறு நடத்தப்பட்ட விசாரணையில் காசியின் நண்பரான டேசன் ஜினோ என்ற 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அதாவது காசி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்ட பின்னர் அந்த வீடியோவை டேசனுக்கு அனுப்பிவிடுவார். அவர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்து காசி சொல்வது போன்று கேட்கவில்லை என்றால் வாழ்க்கை தொலைந்து விடும் என்று மிரட்டி அந்த பெண்களை வலையில் விழ வைத்தார். மற்ற பெண்கள் மட்டுமின்றி தங்களுடைய சொந்த காதலிகளையே ஈவிரக்கமின்றி அனைவரும் அனுபவித்து வந்துள்ள செய்திகளும் விசாரணையில் தெரியவந்துள்ளன. அதேபோன்று காசி கழுட்டிவிடும் பெண்களை அவருடைய நண்பரான தினேஷ் என்பவர் மடக்கி அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை பறித்து பணக்காரராக மாறியுள்ளார். தினேஷும் தன்னுடைய கூட்டாளி என்று காவல்துறையினர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

வாக்குமூலத்தை பெற்ற காவல்துறையினர் தினேஷை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து லேப்டாப் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு திருப்பமாக காசி மீது மேலும் 3 பெண்கள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். அவர்களுள் 2 மருத்துவர்கள் மற்றும் மற்றொரு இளம்பெண் ஆவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஒரு புகைப்படத்தில் காசி காவல்துறையினரின் தொப்பியை பின்புறமாக அணிந்திருந்தார். ஆகையால் ஏதேனும் பெண் காவல்துறையினர் அல்லது அவருடைய மகளுடன் காசிக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காசி பெண்களுடன் முதலில் உறவுக்கொண்டு, அந்தரங்க காட்சிகளை வீடியோவாக எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வீடியோவை அவர் சம்பந்தப்பட்ட பெண்களின் தாயாரிடம் காண்பித்து, அவர்களை மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது அவர்களது தாயார் புகாரளிக்கும் பட்சத்தில் மட்டுமே நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும் விசாரணையை தொடர்ந்தால், பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகும் என்று காவல்துறையினர் நம்புகின்றனர். இந்த வழக்கானது நிச்சயம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு போன்று தமிழகத்தை உலுக்கும் வகையில் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.