பிரபல நடிகர் மகளை மஞ்சத்தில் வீழ்த்தி வீடியோ..! அடுத்தடுத்து வெளியாகும் நாகர்கோவில் காசியின் லீலைகள்..!

பள்ளி சிறுமிகள் முதல் பெண் மருத்துவர் வரை 70க்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து அதன்மூலம் பணம் பறித்து வந்த காசி என்ற காம கொடூரனை நாகர்கோவில் போலீசார் கைது செய்துள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் கணேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் தங்கப்பாண்டியன். இவர் அந்தப் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் பெயர் காசி. கல்லூரி படிப்பை முடித்த காசிக்கு வேலை ஏதும் சரியாக அமையாததால் தன்னுடைய தந்தையின் கடையிலேயே அவருக்கு உதவியாக இருந்திருக்கிறார். பார்ப்பதற்கு அமைதியான சாதுவான பிள்ளையாக காட்சியளிக்கும் காசி மிகப்பெரிய காமக்கொடூரன் என்பது தற்போது வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.

பள்ளி சிறுமிகள் முதல் பெண் மருத்துவர் வரை 70க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோக்களையும் புகைப்படங்களை எடுத்து அதை வைத்து மிரட்டி அவர்களை தன்னுடைய இச்சைக்குப் பயன்படுத்தி இருக்கிறார் காசி. அதுமட்டுமில்லாமல் அவர்களை மிரட்டி பணத்தையும் பறித்து இருக்கிறார். காசி பொதுவாகவே சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர் ஆவார். தன்னுடைய ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது , ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வது போன்ற புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நல்லவர் போல் நடித்து அனைவரையும் தன் வசம் ஈர்த்திருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த இளம் பெண்கள் பலரும் இவர் மிகவும் நல்லவர் போல என்று இவரிடம் முதலில் பேச ஆரம்பித்துள்ளனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடன் காசி நெருக்கமாக பழக ஆரம்பித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர்களுடன் நெருக்கமாக பேசும் போன் கால்களை தன்னுடைய மொபைலில் ரெக்கார்ட் செய்து இருக்கிறார். பின்னர் பெண்களிடம் தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை காண்பித்து மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்திருக்கிறார் காசி. இவ்வாறாக காசி 70க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் பறித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய காதல் வலையில் சிக்கும் பெண்களை தன்னுடைய காம பசி தீர்க்கும் பெண்களாகவும் பயன்படுத்தியிருக்கிறார் காமக்கொடூரன் காசி. இவரது வலையில் பிரபல நடிகர் ஒருவரின் மகளும் சிக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் உடனடியாக போலீசாரிடம் செல்லவே அவரது பாதையை விட்டு ஒதுங்கி இருக்கிறார் காசி. அதுமட்டுமில்லாமல் போலீஸ் ஒருவரின் மகளையும் தன் காதல் வலையில் சிக்க வைத்து அவரிடம் பணம் பறித்து இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இதைப்பற்றி இந்த போலீசாருக்கு தெரிய வரவே உடனடியாக டிரான்ஸ்பர் பெற்றுக்கொண்டு ஊரை விட்டே சென்று விட்டிருக்கிறார்.

உச்சகட்டமாக பெண் மருத்துவர் ஒருவரையும் தன்னுடைய காதல் வலையில் சிக்க வைத்திருக்கிறார் காசி. அந்தப் பெண் மருத்துவரை உருகி உருகி காதலிப்பதாக அவரை முதலில் நம்ப வைத்திருக்கிறார். பின்னர் அவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் உடனடியாக அவரை தன்னுடைய குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்து வைக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார். ஊருக்கு சென்றதும் தன்னுடைய குடும்பத்தில் நிலைமை சரியில்லை என்றும் தன்னுடைய உறவினருக்கு உடல்நிலை சரியில்லாததால் செலவிற்கு பணம் வேண்டும் எனவும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பெண் மருத்துவரிடம் இருந்து ஆறரை லட்சம் ரூபாய் கறந்திருக்கிறார் காசி.

இந்நிலையில் ஒருநாள் பெண் மருத்துவரை நாகர்கோவிலுக்கு வரவழைத்திருக்கிறார். தன் பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைக்க போவதாக கூறி அங்கு அழைத்து வந்துள்ளார். இப்பொழுது வீட்டில் யாரும் இல்லை என்று பொய் கூறி அங்கிருந்த ஓட்டல் ஒன்றில் தங்க வைத்திருக்கிறார். அந்தப் பெண் மருத்துவர் தங்கியிருந்த அறையில் அவருக்கு தெரியாமல் ரகசிய கேமராவை பொருத்தி அவரது நடவடிக்கைகள் முழுவதும் கண்காணித்து அதனை ரெக்கார்ட் செய்திருக்கிறார் காசி. இதனைத் தொடர்ந்து மீண்டும் தன்னுடைய வீட்டில் பணம் தேவை உள்ளது என்று கூறி மருத்துவரிடம் பணம் பறித்து இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்த பெண் மருத்துவரிடம் காசியால் ஏற்கனவே ஏமாற்றப்பட்ட வேறு ஒரு இளம்பெண் அவனைப்பற்றிய சுயரூபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதனை அறிந்த மருத்துவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். அந்த சூழ்நிலையில் காசி பெண் மருத்துவரிடம் மீண்டும் பணம் கேட்டபோது அதை தர மறுத்த அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஒருவேளை நீ பணம் தரவில்லை என்றால் உன்னைப்பற்றிய  புகைப் படங்களையும் , ஹோட்டல் அறையில் தங்கி இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவேன் என்று காசி மிரட்டி இருக்கிறார்.

காசியின் மிரட்டலுக்கு அசராத அந்த பெண் மருத்துவர் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று கறாராக கூறியிருக்கிறார். உடனே காசி தன்னிடமிருந்த போலியான அக்கவுண்ட்டை பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் மருத்துவரின் அந்தரங்க வீடியோ பதிவை பதிவேற்றம் செய்திருக்கிறார். இதனை பார்த்து அந்த பெண் மருத்துவர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசிடம் நடந்த அனைத்தையும் பற்றி கூறியிருக்கிறார். இதனை அறிந்த போலீசார் காசியை அழைத்து விசாரணை செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து அதனை திறந்து பார்த்த பொழுது அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது 70 ற்கும் மேற்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவிகள் முதல் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் வரை பலரது அந்தரங்க வீடியோக்களை அவரது செல்போனில் வைத்திருந்திருக்கிறார் காசி. சொல்ல போனால் இந்த சம்பவம் மற்றொரு பொள்ளாச்சி சம்பவமாக இருக்கக்கூடும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர் போலீசார். தற்போது போலீஸார் காசியின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விசாரணையின் முடிவில் காசிக்கு உதவியாக இருந்த அரசியல்வாதிகள் முக்கிய பிரபலங்கள் என பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.