கருவின் எண்ணிக்கையை குறைப்பது நல்லதா ?? இதோ மருத்துவ விளக்கம்..

இரண்டு குழந்தை என்றால் பெற்றோர் சந்தோஷப்படுவார்கள். அதுவே மூன்று குழந்தைகள், நான்கு குழந்தைகள் என்றால் சந்தோஷத்திற்கு பதிலாக பயம்தான் உண்டாகும். கூடுதல் குழந்தைகள் இருப்பதால் எந்தக் குழந்தைக்கும் போதுமான சத்துக்கள் கிடைக்காது. அதனால் தேவையில்லாத கருவை கழிப்பதும் ஒரு மருத்துவ நடைமுறை ஆகும்.


              பொதுவாக மூன்று அல்லது நான்கு குழந்தைகள் வயிற்றுக்குள் இருக்கும்போது ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக, அவை இரட்டைக் குழந்தைகளாக மாற்றப்படுகின்றன.

              மிகவும் அனுபவமும் தகுதியும் வாய்ந்த மருத்துவர்கள் மூலமே இந்த சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும், மேலும் மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருக்கவேண்டும்.

              பொதுவாக மருந்து செலுத்தி கரு கரைப்பதையே மருத்துவர்கள் மேற்கொள்கிறார்கள். அதேபோல் இருப்பதில் பலவீனமான கருவே கலைக்கப்படுகிறது.

              எந்தக் கரு பரிசோதனைக்கு ஏற்றவகையில் பக்கத்தில் இருக்கிறதோ, அந்த கருவை கரைப்பதும் நடைமுறையில் இருக்கிறது.

இந்த நடைமுறையினால் தாய்க்கும் குழந்தைகளுக்கும் நிறையவே நன்மைகள் உண்டு. அதேநேரம், திடீரென ஒட்டுமொத்த கருக்களும் கலைந்துபோகும் அபாயமும் சிறிய அளவுக்கு உண்டு என்பதை அறிந்திருக்க வேண்டும்.