நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

அரசு மருத்துவமனைகளில் எல்லாம் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டதில் இருந்தே நிலவேம்பு மகிமையை உணரலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் அனைவருக்கும் இது நன்மை தரக்கூடியது.


·         சளியுடன் கூடிய காய்ச்சலுக்கு தினமும் நிலவேம்பு கசாயத்தை காலையும் மாலையும் எடுத்துக்கொண்டால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

·         சாதாரண காய்ச்சலில் இருந்து டெங்கு, சிக்குன்குனியா, வைரஸ் காய்ச்சலுக்கும் சிறந்த முறையில் பயன்படுகிறது.

·         ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கையை உயர்த்தும் சக்தி நிலவேம்புக்கு உண்டு என்பது அறிவியல்ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

·         நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் எந்த நோய் பாதிப்பு இல்லாதவர்களும் நிலவேம்பு கசாயம் எடுத்துக்கொள்ளலாம்.