எந்த ராசிக்காரர்களுக்கு என்ன நோய் வர வாய்ப்பு இருக்கிறது தெரியுமா? அத்தனை ராசிகளுக்கும் பலன்கள்

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பிறப்பானது எவ்வகையில் உறுதி செய்யப்பட்டதோ அதைப்போலவே ஒருவரின் இறப்பும் அவர் செய்த கர்ம வினைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன.


ஒருவருக்கு ஏற்படும் இன்ப, துன்பங்கள் அவர் செய்த கர்ம வினையாலும், இந்த பிறவியில் செய்யும் செயல்களாலும் உண்டாகின்றன என்பதை நாம் நன்கு உணர வேண்டும். நம்மால் நன்மை செய்ய முடியவில்லை என்றாலும் தீமை செய்யாமல் இருப்பதே நன்றாகும். 

ஒருவருடைய ஜாதகத்தை வைத்து அவரின் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்தையும் கூற இயலுமா? அதாவது அவரின் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றம் மட்டுமின்றி அவருக்கு ஏற்படும் நோய்கள் ஆகியவற்றையும் கூற முடியுமா என்றால் ஒருவருடைய ஜாதகத்தை கொண்டு அவரின் குணங்கள், முன்னேற்றம் ஆகியவற்றை கூற இயலும்போது அவருக்கு ஏற்படும் நோய்களை பற்றியும் கூற இயலும். 

ஜோதிடம் என்பது மிகப்பெரிய கலையாகும். இந்த கலைக்காக பல பேர் தன்னுடைய வாழ்நாட்களை அளித்து பெற்ற ஒரு வரப்பிரசாதம் ஆகும். பண்டைய தமிழர்கள் தங்கள் வாழ்நாளில் கற்க வேண்டிய கலைகளாக பகுத்து வைத்த ஆயகலையான 64ல் சோதிடம் என்பது முதன்மையான கலையாகும். 

ஜோதிடமும், மருத்துவமும் : ஜோதிடமும், மருத்துவமும் நெருங்கிய தொடர்பு உடையவை. ஏனெனில், இவை இரண்டையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள் நவகிரகங்கள் ஆகும். 

ஜோதிடத்தின் உதவிக் கொண்டு பின்னாளில் ஏற்படும் நோய்கள் மற்றும் துன்பங்களையும் அறிய இயலும். நமது உடலானது பஞ்சபு+தங்களால் உருவானது. நம்மை ஆளும் நவகிரகங்களின் தன்மைக்கேற்ற அவர்கள் கொண்ட பலத்தின் அடிப்படையில் என்னென்ன நோய்கள் மற்றும் உடல் கோளாறுகள் ஏற்படும் என்பதை நன்கு கூற இயலும். 

ஜோதிடத்தின் ஆறாம் இடத்தினை கொண்டு அவருக்கு ஏற்படும் நோய்கள் பற்றி நாம் அறிந்து கொள்ள இயலும். 

நவகிரங்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட பல நோய்களை அளிக்க வல்லவர்கள். ஆறாம் இடமோ அல்லது ஆறாம் இடத்தில் இருந்து ஒரு கிரகம் தசை நடக்கும்போது உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. 

லக்னாதிபதியின் பலத்தையும், ஆறாம் இடத்தின் வலிமையும் நன்கு அறிந்து அதற்கு தகுந்தாற்போல் ஏற்பட இருக்கும் நோயின் தாக்கத்தையும், காலத்தையும் அறிய இயலும். 

நமது உடலில் தாங்கவே முடியாத வலிகளுக்கு எல்லாம் காரணமாக இருப்பவர் கேது. உடலில் கெட்ட வியர்வை, அதனால் உடல் துர்நாற்றம் வருவதும் கேதுவால் தான். எலும்பு வெளியே தெரியும் அளவிற்கு மெலிந்த உடல்வாகு கொண்டவர்களுக்கு கேதுவின் ஆதிக்கமே காரணம். மூச்சுத் திணறல், மூச்சு விட முடியாமல் அவதிப்படுவது, கெட்டுப் போன.. விஷத்தன்மை கொண்ட உணவுகளால் ஏற்படும் நோய்கள், காற்றில் பரவக்கூடிய நோய்கள் ஆகியவற்றுக்கும் கேது தான் காரணம் ஆவார். 

லக்னாதிபதி+ சந்திரன் ஆகிய இரண்டும் ராகு/கேதுவுடன் சேர்க்கை பெற்று, செவ்வாயின் பார்வை பெற்றிருந்தால் அந்த ஜாதகருக்கு உறுதியாக புற்றுநோய் ஏற்படும் எனக் கூறலாம். லக்னாதிபதி மற்றும் சந்திரனுடன் ராகு, கேது சேர்ந்திருந்தால் உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. லக்னாதிபதியுடன் சனி+ராகு இருந்தாலும் நோயால் (பால்வினை, புற்றுநோய்) உயிருக்கு பாதிப்பு ஏற்படும். 

எனவே, ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும், சந்திரனும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஒருவர் நோயின்றி மகிழ்ச்சியாக வாழ முடியும். லக்னாதியும், சந்திரனும் கெட்டுப் போயிருந்தால் அவர்கள் எப்போதும் நோயாளிகளாகவே இருப்பர்.