சூப்பர் ஓவரில் கடைசி இரண்டு பந்தில் இரண்டு சிக்சர்கள் விளாசி தெறிக்க விட்ட ரோகித் சர்மா! ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை வென்ற இந்திய அணி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சூப்பர் ஓவரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.


இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா தங்களது அதிரடியான ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். 

லோகேஷ் சர்மா அபாரமாக விளையாடி 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். லோகேஷ் ராகுல் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். விராட் கோலி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பென்னட் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும் பின்னர் களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

95 ரன்கள் எடுத்த கேன் வில்லியம்சன் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார் . கடைசி ஓவரில் 4 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமி சிறப்பாக பந்துவீசி ஒரு ரன்னை மட்டும் விட்டுக் கொடுத்தார். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் பும்ரா வீசிய ஓவரை அடித்து ஆடினர். இதனால் அந்த அணியினர் சூப்பர் ஓவரில் 17 ரன்கள் விளாசினர். 18 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி முதல் 4 பந்துகளில் 8 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தனர். கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர் விளாசி ரோகித் சர்மா இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.