இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களை எடுத்துள்ளது.
மாஸ் காட்டிய ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட்! பந்து வீச்சில் கலக்குமா இந்தியா!

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய லோகேஷ் ராகுல் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வெளியேறினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலியும் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பின்னர் ரோகித் ஷர்மாவும், ஸ்ரேயஸ் ஐயர் இருவரும் நிதானமாக ஆடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
நிதானமாக ஆடிய ரோகித் சர்மா 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ரிஷாப் பாண்ட் , ஸ்ரேயஸ் ஐயருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 71 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.
இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களை எடுத்தது.