காயம் காரணமாக பாதியில் விலகிய ரோகித் சர்மா! இந்திய அணி மந்தமான பேட்டிங்! நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்தது.


டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ரோகித் சர்மா இந்த போட்டிகளில் கேப்டனாக களம் இறங்கினார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரரான லோகேஷ் ராகுலுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய லோகேஷ் ராகுல் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடைய கொண்டாடிக் கொண்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக 60 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் இன்றைய போட்டியில் அவர் கேப்டன் பணியை தொடர்வாரா அல்லது வேறு யாராவது கேப்டன்ஷிப் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.