தென்னாபிரிக்காவை தெறிக்கவிட்ட மயங்க் அகர்வால்!

இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்டில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.


தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் தென்ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை விளாசினர் . சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் . அபாரமாக விளையாடிய மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 215 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய எந்த வீரரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.தென்னாபிரிக்க அணியின் சார்பில் மஹராஜ் 3 விக்கெட்களை வீழ்த்தினார் .

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்களை எடுத்துள்ளது.