மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி! வான்கடேவில் இன்று தொடக்கம்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது.


ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1:30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை இதற்கு முன்பு விளையாடிய மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரை அபாரமாக வென்றதன் மூலம் உத்வேகத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை எதிர்கொள்ள உள்ளது. ஆஸ்திரேலியா அணி உலகின் பலம் வாய்ந்த அணைகளில் ஒன்று என்பதால் இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா பேட்டிங், பந்துவீச்சு,பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதால் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் , டேவிட் வார்னர் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர்கள் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுப்பார்கள் எனவும் கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.