நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 21 நாட்களுக்கு என்ன கிடைக்கும்? என்ன கிடைக்காது? என்பதை விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.
கொரோனா ஊரடங்கு! அடுத்த 21 நாட்களுக்கு என்ன கிடைக்கும்? என்ன கிடைக்காது?
எந்த கடைகள் திறந்திருக்கும்? எந்த சேவைகள் கிடைக்கும்?
• ரேஷன், பால், காய்கறி, இறைச்சி, மருந்து, மளிகை கடைகள் திறந்திருக்கும்.
அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.
• அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி
• உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள், மருந்துகள் ஆன்லைன் மூலம் பெறலாம்.
• உணவு, மருந்துகளை டோர் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி.
• வங்கிகள், ஏடிஎம்கள், காப்பீடு நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும்.
எந்த கடைகள் மூடப்பட்டிருக்கும்? எந்த சேவைகள் கிடைக்காது?
• கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கும்.
• விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.
• பெட்ரோல், கேஸ் ஏஜென்சிகள் செயல்படவும், பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்திற்கும் அனுமதி
• இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கூடக் கூடாது.
• பிப்.15க்கு பின் இந்தியா திரும்பியவர்கள் சுகாதாரத்துறை அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்
• தனிமைப்படுத்தலை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.