ஈசன் கோயில் நிழல் தலைகீழாக விழும் அதிசயம்... விஞ்ஞானத்தை மிரட்டும் கோயில் எங்கே இருக்கிறது தெரியுமா?

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் ஹம்பி என்னுமிடத்தில் துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது விருபாட்சர் கோயில்.


உலகப் புகழ் பெற்ற இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசால் கட்டப்பட்டது இந்தக் கோயிலின் ராஜகோபுரம் 165 அடி உயரம் கொண்டது. இதன் நிழல் ஒரு சுவற்றின் மீது தலைக்கீழாக விழுகிறது. இந்த அதிசய நிழலின் ரகசியம் இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது.

நிழலானது தலைகீழாக விழவேண்டுமென்றால் நிஜத்திற்கும் நிழலுக்கும் இடையில் கண்ணாடி போல ஏதாவது ஒன்று நிச்சயம் தேவைப்படும். ஆனால் இங்கு அப்படி எதுவும் இல்லாமல் இந்த கோயிலின் நிழல் எப்படித் தலைகீழாக விழுகிறது என்பதை யாராலும் கண்டறிய முடியவில்லை.

இந்தக் கோவிலில் உள்ள மண்டபம் ஒன்றில் 114 தூண்கள் உள்ளன. மற்றொரு மண்டபத்தின் நடுவில் ஒரு வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு அதில் துங்கபத்ரா ஆற்றின் நீர் மடைப்பள்ளியை அடைந்து பின் வெளிப்பிரகாரம் வழியாக வெளியேறுகிறது. வடிகால் கால்வாய் முதல் வானளாவிய கோபுரம் வரை அனைத்திலும் மிகச்சிறந்த கட்டடக்கலையின் திறன் காண்போரை பிரமிக்க வைக்கிறது.

விஞ்ஞானிகள் கோபுரத்துக்கும் சுவருக்கும் இடையே ஒரு துளை லென்ஸ் போல செயல்பட்டு கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழச் செய்கிறது என்று கூறுகின்றனர். ஆனால் அவை நிரூபிக்கப் படவில்லை.

இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்ததில் இதை சாளுக்யா மற்றும் ஹொய்சலா வம்சத்தினர் கட்டியதாகத் தெரிகிறது. ஆனாலும் கிருஷ்ணதேவராயர் காலத்திலும் இந்தக் கோயிலில் பல திருப்பணிகள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கிறது.

அந்நிய படையெடுப்புகள் பல வந்தாலும் இந்த கோயிலை எதுவும் செய்ய முடியவில்லை என்பது இந்த கோயிலின் மற்றொரு தனி சிறப்பாகும். படையெடுப்புகளால் 1565ம் ஆண்டு இந்த நகரமே அழிந்தபோதும் இந்த கோயில் மட்டும் எந்த பாதிப்புமின்றி கம்பீரமாக காட்சி தருகிறது.