இரண்டு மனைவிக்கு ஆசையா? உங்க ஜாதக அமைப்பில் இதுவெல்லாம் இருக்குதான்னு பாருங்க!

திருமண பந்தத்தில் கைகோர்த்து இல்லறத்தில் இனிமையாக, இன்பமாக அனுபவிக்கும் நிறைவு எல்லோருக்கும் எளிதல் அமைவது இல்லை. அதேபோல் மிகவும் நிறைவாக தங்களின் வாழ்க்கையை வாழும் சிறப்புடைய தம்பதிகள் பலர் உண்டு.


ஜாதகத்தில் குடும்பஸ்தானம், களத்திரஸ்தானம் ஆகிய இரு நிலைகளை மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. இந்த இரு நிலைகளில் அமையும் கிரகங்களின் தன்மை இந்த ஸ்தானங்களின் கிரகத் தன்மை என்பன பல வகையிலும் ஒருவரது குடும்ப வாழ்வில் குழப்ப நிலைகளை கொடுத்து விடுகின்றது. எனவே ஜாதக கிரக நிலையில் குடும்ப களத்திரஸ்காரகன் என அமைகின்ற கிரகங்களின் தன்மைகளும் செயற்பாடுகளும் மிகவும் முக்கியமானதாக அமைகின்றது. 

சந்திர சுக்கிர சேர்க்கையின் காரணமாக இந்த நிலை ஏற்படுகின்றது. சுக்கிரனும், சனியும் சேர்க்கை பெற்று அமைந்தாலோ அல்லது பார்வை பெற்றாலோ பெண்களால் தொல்லை அவமானம் ஏற்படும். கணவன், மனைவி இடையே மனக்கசப்புகள் அமையும். 

சூரியன், செவ்வாய் சேர்க்கையும் தம்பதிகளுக்கிடையே மனஸ்தாபம் பிரிவுகளைக் கொடுக்கும். சுக்கிரன், சந்திரன் சேர்க்கை குடும்ப வாழ்வில் குழப்பத்தை உண்டு பண்ணும். 

இந்தச் சேர்க்கை பெற்றோர் அதிகமான பெண் தொடர்புகளை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த அமைப்புக் கொண்டவர்கள் பெண்களால் பலவித பிரச்சனைகளுக்கு ஆளாகின்ற நிலைகள் அமையும். எனவே மிகவும் நிதானமாக இவர்கள் செயல்பட வேண்டும். 

எந்த கிரகம் நீச்சமாகிறதோ அந்த கிரகத்தின் காரகத்துவங்களை அடைவதற்கு தடைகளும், அது கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும், தோல்விகளையும் நீசம் கொடுக்கும். அதுவே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கும் பின்னர் இழந்த எல்லாவற்றையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக வழங்கி விட்டு போய்விடும். இதுவே நீசபங்கம் ராஜயோகம் ஆகும். 

பொதுவாக இருதார பலன், ஒருவரின் ஜாதகத்திலே களத்திரம் எனப்படுகின்ற 7 ஆம் இடம் சூரியன், சனி, செவ்வாய், சுக்கிரன் போன்ற கிரகங்களின நிலை அமைவதும், களத்திரஸ்தான நிலைக்கு உரிய கிரகம் நீசபங்க நிலை பெறுவதும் இரு தாரப்பலன் கொடுக்கும். அதேபோல் சூரியன், செவ்வாய், சேர்க்கை, சுக்கிரன், குரு சேர்க்கை என அமையும் நிலையும், குடும்பஸ்தான நிலையில் மேற்படி கிரகங்கள் அமைவதும் குடும்பஸ்தான கிரகங்கள் நீசபங்கம் பெறுவதும், இரு தாரப் பலன் கொடுக்கும் நிலைகள் உண்டு. 

மேலும் லாபஸ்தான அதிபதி 12 ஆம் இடம் அமைவதும், களத்திரஸ்தானக் கிரகங்கள் 8 ஆம் இடம் மறைவது அல்லது நிலை பெற்று அமைவதும், 4 ஆம், 11 ஆம் அதிபதிகள் சேர்க்கை பெற்று விரயஸ்தான 12 ஆம் இடம் அமைவதும், செவ்வாய் தோஷமுடன் அட்டமாதிபதிக் கிரகம் களத்திரஸ்தான நிலையிலே அமைவதும் இருதாரப் பலன் கொடுக்கும் நிலை ஏற்படுத்தும். 

அதோடு கேது, ராகு, சனி, சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்களின் சம்பந்தமுடைய ஒரு சில நட்சத்திரங்களான மூலம், மகம், சுவாதி, சித்திரை, கார்த்திகை, பூசம், பூரம், ஆயில்யம், ரோகிணி போன்ற நட்சத்திரம் கொண்ட ஆண், பெண் இருபாலாரும் இரு தாரப் பலன் பெறுகின்ற நிலை அதிகமுண்டு. அவர்களின் ஜாதக நிலையை நன்கு ஆராய்ந்து செயற்பட வேண்டியது மிக மிக அவசியமாகும். 

இதே போல் சிலருக்கு ஆண் ஜாதக அமைப்பில் களத்திரகாரக கிரகம் 3 ஆம் இடம் அமைந்து இருப்பதும் குடும்பஸ்தான அதிபதி பலவீனமடைந்து இருப்பதும் முதல்தார மனைவியின் சகோதரியே இரண்டாம்தார மனைவியாக அமையும் நிலை ஏற்படும். 

சந்திரன், சுக்கிரன் குடும்ப களத்திரஸ்தான நிலையிலே அமைந்து சிறப்பு நிலைபெற்று இருந்தாலும் சுபக்கிரக பார்வை பெற்றாலும் வெளிப்படையாக இரு தாரம் திருமணம் செய்யும் நிலையும், இருவரையும் சமமாகப் பேணி வாழும் தன்மையும் கொடுக்கும்.