5 வயது மகன்! அதிகாலை 5மணி! 5வது மாடியில் இருந்து கர்ப்பிணி மனைவியை தூக்கி வீசிய கணவன்! அதிர்ச்சி காரணம்!

கள்ளக்காதலியை கல்யாணம் செய்து கொள்வதற்காக கர்ப்பமாக இருந்த மனைவியை ஐந்தாவது மாடியில் இருந்து தூக்கி வீசி கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அனுப் மற்றும் வந்தனா திவாரி தம்பதியினர் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை ஐந்து மணிக்கு அருகே உள்ள காவல் நிலையத்திற்கு போன் செய்த அனுப், தனது மனைவி ஐந்தாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் வந்தனாவின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி ஐந்தாவது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரது கணவர் அனுப் அவர்களிடம் நடத்திய விசாரணையில், எங்கள் இருவருக்கும் கடந்த சில நாட்களாகவே குடும்ப பிரச்சினை நிலவி வந்தது. நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது என் மனைவி கோபத்தில் என் மீது சுடு தண்ணீரை ஊற்றி விட்டாள். அதன் பின்னர் திடீரென்று மாடியில் சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் எனவும் அவரது கணவர் கூறினார்.

மேலும் அவர் உடலில் அவரது மனைவி சுடு தண்ணீர் ஊற்றியதால் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுப் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் போலீசார் இவர்களது ஐந்து வயது மகனிடம் விசாரித்தபோது பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தன. அந்த சிறுவன் என் அப்பா அடிக்கடி என் அம்மாவிடம் உன்னை நான் கொன்று விடுவேன் என்று கூறி வந்தார் எனவும் அந்த சிறுவன் கூறினான்.

மேலும் சம்பவம் அறிந்த வந்தனாவின் உறவினர்கள் , அனுப் திட்டமிட்டே வந்தனாவை கொலை செய்துள்ளான் . இது தற்கொலை அல்ல. மேலும் வந்தனா தற்போது கர்ப்பமாக உள்ளார் என்ற தகவலையும் கூறினர். மேலும் வந்தனாவின் சகோதரர் போலீசாரிடம் கூறுகையில், அனுப் வேலை செய்யும் இடத்தில் ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் எனவும் , அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள அனுப் முடிவு செய்துள்ளார். இந்த விவரம் அறிந்த என் சகோதரி வந்தனா அவரது கணவன் அனுப் இடம் கேட்டதற்கு, உன்னை கொன்று விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். மேலும் அந்தப் பெண்ணின் வீட்டில் அனுப் அடிக்கடி போய் தங்குவான் என்றும் அவரின் சகோதரர் கூறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த எனது தங்கை அந்த இளம் பெண்ணின் பெற்றோருக்கு போன் செய்தும் பேசியுள்ளார் . ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து எந்த முறையான பதிலும் கிடைக்கவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. சில நாட்களுக்கு முன்பு அனுப் எனக்கு போன் செய்து உன் சகோதரியை இங்கிருந்து அழைத்துச் சென்று விடு. இல்லை என்றால் நான் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினான். தற்போது ஊரடங்கு நிலவி வருவதால் முடிந்த உடன் எனது சகோதரியை கூட்டி செல்கிறேன் என்று நான் கூறி இருந்தேன் அவரது சகோதரர் கூறினார்.

இதனையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில் வந்தனா தற்கொலை செய்து கொள்ளவில்லை . அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனுப் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளார். கள்ளத் தொடர்பில் இருந்த அந்த பெண்ணும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.