ஒருத்தன் ரெண்டு பேர் இல்லை..! பல ஆண்களுடன்..! அம்பலமான காதல் மனைவியின் அந்தரங்கம்! நள்ளிரவில் கணவன் செய்த சம்பவம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவிக்கு பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததை அறிந்த கணவன் நள்ளிரவில் தனது காதல் மனைவியை துடி துடிக்க கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சுண்ணாம்பு சூளை பகுதி அமைந்துள்ளது. இங்கு கவுஸ்பாஷா (வயது 36) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வெல்டிங் வேலை செய்து வந்துள்ளார். கவுஸ் பாஷா கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக அஸ்வினி என்ற பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து திருமணமும் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகனும் 10 வயதில் இன்னொரு மகளும் உள்ளனர். இது தம்பதியினருக்கு இடையே அடிக்கடி பல தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை கணவன் மனைவி இருவருக்கும் இடையில் சண்டை நிகழ்ந்துள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த கவுஸ் பாஷா அருகிலிருந்த கட்டையை எடுத்து தன் மனைவியின் தலையில் அடித்து இருக்கிறார். கவுஸ்பாஷா தனது மனைவி அஸ்வினியை சரமாரியாக தாக்கியதில், அஸ்வினி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார். இதுகுறித்து ஓசூர் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்த அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அஸ்வினியின் காதல் கணவரான கவுஸ்பாஷாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. கவுஸ்பாஷா பொதுவாகவே குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனையடுத்து அஸ்வினி பல ஆண் நண்பர்களுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த கவுஸ் பாஷா தன் மனைவியிடம் இந்த பழக்கத்தை கைவிடுமாறு பலமுறை வற்புறுத்தி இருக்கிறாராம். இருப்பினும் கணவனின் சொல்லை கேட்காத அஸ்வினி தொடர்ந்து அதே செயலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். மேலும் கவுஸ் பாஷா குடித்து விட்டு வீட்டிற்கு வந்தால் அவருக்கு உணவு சமைத்து தருவதையும் நிறுத்தி விடுவாராம் அஸ்வினி. 

கடந்த திங்கட் கிழமையன்றும் கவுஸ்பாஷாவிற்கு அஸ்வினி உணவு சமைக்காத தால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு நிகழ்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் கோபம் எல்லை மீறி சென்றவுடன் கவுஸ்பாஷா அருகிலிருந்த கட்டை எடுத்து தன் மனைவி என்றும் பாராமல் அடித்துக் கொலை செய்திருக்கிறார். இதனை அவரே தன்னுடைய வாக்கு மூலமாக போலீசாரிடம் கூறி இருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.