நேர் கோட்டில் வரும் கிரகங்கள்..! அடுத்து நடக்கப்போவது என்ன? ஜோதிடச் சிறுவன் அபிக்யாவின் அடுத்த பகீர் கணிப்பு..!.

கொரோனா தாக்கம் முற்றிலுமாக குறைந்தாலும் உலக மக்கள் இன்னும் பல்வேறு துயரங்களை சந்திக்க நேரிடும் என்று அபின்ஞா ஆனந்த் வெளியிட்டுள்ள வீடியோ மக்களிடையே வைரலாகி வருகிறது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1,19,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 19,50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்த வைரஸ் தாக்குதல் மிகவும் கொடூரமாக இருக்கக்கூடும் என்று 8 மாதங்களுக்கு முன்னதாகவே பிரபல இந்திய வம்சாவளி ஜோதிடரான அபின்ஞா ஆனந்த் கூறியிருந்தார். 

இவருடைய வயது 14. இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். சென்ற ஆண்டு தொடக்கத்திலேயே கிரகநிலை ஆராய்ச்சிகளின் மூலம் ஆண்டு இறுதியில் மிகப்பெரிய அழிவு தொடங்கப்போகிறது என்று கணித்திருந்தார். அதாவது ஜோதிடத்தின் படி ஒரு ராசியில் அதிக கிரகங்கள் சேருகின்ற போது விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் இந்த வைரஸ் தாக்குதல் முற்றிலும் ஒழிந்தாலும், உலக மக்கள் இன்னும் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார். கிரக கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருவதாலேயே இதுபோன்ற அசம்பாவிதங்கள் அரங்கேறி வருவதாக கூறியுள்ளார்.

மேலும் இவற்றுக்கு எதிராக உலக மக்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வைரஸ் தாக்குதல் ஒழிந்த பிறகும் உலக மக்கள் பல்வேறு விதமான பேராபத்துகளை சந்திக்க நேரிடும் என்றும் புதிய வீடியோவில் கூறியுள்ளார். உணவு பற்றாக்குறை ஏற்படும் என்றும், அவ்வாறு ஏற்படுவதற்கு முன்னரே அரசாங்கமானது விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதாவது டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை, இந்த வைரஸ் தாக்குதலை விட பேராபத்தை மிகப்பெரிய அளவில் உலக மக்கள் சந்திக்க நேரிடும் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார். மேலும் இதிலிருந்து மக்கள் தங்களை காப்பாற்றி கொள்வதற்கு, உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள வேண்டுமென்றும், இயற்கைக்கு எதிராக நாம் செயல்புரிவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

நம்முடைய உணவு வழக்கங்களில் மஞ்சள், அலோவேரா, அதிமதுரம் போன்ற இயற்கை பொருட்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இன்னும் கிருமிநாசினி உபயோகப்படுத்துவதை குறைக்க வேண்டும் என்றும், மஞ்சள் மற்றும் வேப்பிலை மூலம் கிருமிநாசினியை தயாரிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரமானது நவம்பர் மாதம் வரை தொடர்ந்து வீழ்ச்சியில் இருக்குமென்றும், அதன்பின்னர்தான் கொஞ்சம் கொஞ்சமா பொருளாதாரத்தில் ஏற்றத்தை காண இயலும் என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.