கேரளாவில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி ஒருவரை சகபயணி மானபங்கப்படுத்திய சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லடா ஆம்னி பஸ்! நள்ளிரவு பயணம்! இளம் பெண்ணின் பின்னழகில் கை வைத்த சக ஆண் பயணி! அதிர்ச்சி சம்பவம்!

கேரளா மாநிலத்தில் சமூக சீர்திருத்தங்களில் ஆர்வம் உள்ள பெண்ணொருவர் கசரகோட் என்னும் இடத்திற்கு கல்லடா நிறுவன பேருந்தில் பயணித்து கொண்டிருந்தார். இரவு நேரத்தில் தூங்குவதற்காக கர்டெயன்களை சரி செய்து கொண்டிருந்தார். அதன்பின்னர் பேருந்தில் இருந்த ஊழியர்கள் கர்டெய்ன்களை சரி செய்துவிட்டனர். நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த வேலையில் எதிரே படுத்துக்கொண்டிருந்த இளைஞர் அவரை மானபங்கப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து திடீரென்று எழுந்த நான் அவர் கத்தி புலம்பியுள்ளார். உடனடியாக பேருந்து ஓட்டுநர்கள், பேருந்திலிருந்து அவரை வெளியே இறக்கிவிட முயன்றனர். ஆனால் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு அந்த பெண் அறிவுறுத்தியுள்ளார். அந்த இளைஞருடன் சண்டை போடுவதை அந்த பெண் வீடியோ எடுத்துள்ளார்.
அதிகாலை 3 மணியளவில் அந்த இளம்பெண் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று நிகழ்ந்தவற்றை கூறி புகார் அளித்துள்ளார். தான் உறங்கிக் கொண்டிருந்த போது தனது பின்னழகில் அந்த நபர் கையை வைத்து தடவியதாக கூறி அதிர வைத்துள்ளார். காவல்துறையினர் அவர்மீது 354 ஏ பிரிவில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். விசாரணையை அவருடைய பெயர் முனாவீர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவமானது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.