நரம்புக்கு நலம் தரும் இஞ்சி வலிப்பை நீக்குமா ??

மலைப் பிரதேசங்களிலும் அதிகம் மழை பொழியும் இடங்களிலும் விளைகிறது இஞ்சி. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஓடன்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி வலிப்பு நோயைக் குணப்படுத்தும் தன்மைகள் இஞ்சியில் நிரம்பியுள்ளன.


ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருப்பதால் தினமும் ஏதேனும் ஒரு வகையில் நம் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்ளும்படி முன்னோர்கள் வலியுறுத்தினார்கள்.

       ·   இஞ்சியில் இருக்கும் காம்ஃபின், ஜின்ஜிபெரி போன்றவை உடலுக்கு தெம்பும் நரம்புக்கு புத்துணர்வும் தரக்கூடியது.

       ·   சாதாரண காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்னைகளுக்கு இஞ்சியை மருந்தாக பயன்படுத்தலாம் என்கிறது ஜப்பான் மருத்துவ ஆய்வு நிறுவனம்.

       ·    இஞ்சியை தோல் நீக்கி அரைத்து சாறு எடுத்துக் குடித்தால் உணவு செரிமான பிரச்னைகள் தீரும். வாந்தி, குமட்டலுக்கு நல்லது.

       ·   வயிற்றில் தொந்தி, குறட்டை பிரச்னை இருப்பவர்கள் இஞ்சியில் தேன் கலந்து குடித்துவந்தால் உடல் மெலிந்து நல்ல பலன் கிடைக்கும்.

      தேவையில்லாத கொழுப்பை கரைக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு. வாய்ப்புண், வயிற்றுப்புண் உள்ளவர்கள் இஞ்சியை தவிர்க்க வேண்டும்.