வினை தீர்க்கும் விநாயகன்! உங்கள் ராசிக்கு ஏற்ப வழிபட்டால் கிடைக்கும் யோகம் இதோ!

பூத கணங்களின் அதிபதியாக திகழ்பவர் தான் விநாயகர். முழுமுதற் கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு தான் ஆரம்பிக்கின்றோம்.


கணபதியை வணங்கினால் காரியத்தடைகள் யாவும் நீங்கும். விக்ன விநாயகனை வணங்க வினைகள் யாவும் நெருங்காது. அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகரும், கணங்களுக்கெல்லாம் அதிபதியும், விக்கினங்கள் யாவற்றையும் நீக்கி பக்தர்கள் வேண்டும் வரங்களை வாரிவழங்கும் வள்ளலுமாகிய விநாயக பெருமானை நோன்பிருந்து வணங்கி பேரருள் பெறுவோம்.

இங்கு ஒவ்வொரு ராசிக்காரர்களும் விநாயகரை எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி காண்போம்...மேஷம், கடகம், துலாம், மகரம் : இந்த ராசிக்காரர்கள் வளர்பிறையில் வரும் சனிக்கிழமைகளில் விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். அதாவது, சூரிய உதயத்திற்கு பின்னர் காலை 6.00 மணி முதல் 7.30 மணிக்குள் தேங்காய் உடைத்து, அருகம்புல்லினால் விநாயகரை அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் : இந்த ராசிக்காரர்கள் வளர்பிறையில் வரும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் விநாயகரை வழிபடலாம். அதாவது விடியற்காலை பிரம்மமுகூர்த்த நேரத்தில் காலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையான காலத்தில் தேங்காய் உடைத்து, வெள்ளெருக்கு மலர் அல்லது வெள்ளை அரளிப் பூ அல்லது வெண்தாமரை மலரினால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

மேலும், பசும் பால், அவல், கொண்டைக்கடலை சுண்டல், பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். சித்திரை : சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேன், பால் படைத்து வழிபட வேண்டும். உத்திராடம் : உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மோதகம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

ரேவதி : ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பாசிப்பயிறை நைவேத்தியம் செய்து விநாயகரை வழிபட வேண்டும். மற்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வளர்பிறை செவ்வாய், சனிக்கிழமைகளில் தேங்காய் உடைத்தும், செவ்வரளி பூவினால் விநாயகரை அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பசும்பால், அப்பம், வடை, அவல், பொரிகடலை போன்றவற்றை நைவேத்தியம் செய்தும் வெற்றிலை, பழம், பாக்கு வைத்து விநாயகரை வழிபடுவது நல்லது.

இதனால் எடுத்த காரியங்கள் பிரச்சனைகள் இன்றி நடைபெறும். சகல சௌபாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கும்.