5 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து தந்தை கைது செய்யப்பட்ட சம்பவமானது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
50 வயதில் 5 மனைவிகள்! ஆனாலும் அடங்காத ஷான் பாஷா! பெற்ற மகளிடம் வரம்பு மீறிய கொடூரம்!

வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கருகே காயிதேமில்லத் நகர் எனும் இடத்தை சேர்ந்தவர் ஷான்பாஷா. இவருடைய வயது 50. அப்பகுதியில் தேவைப்படுகின்ற சிறுசிறு பணிகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டவர்.
ஷான்பாஷா பெண்களை காதல் வலையில் விழ வைப்பதிலும் திறமையானவர். இதுவரை அவர் 5 பெண்களை தன்னுடைய வலையில் விழ வைத்து திருமணம் செய்துள்ளார். ஷான்பாஷாவுக்கு மது அருந்தும் பழக்கமுள்ளது.
இவருடைய 3-வது மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிறந்த 5 வயது பெண் குழந்தை பாஷாவின் தங்கை வீட்டில் வளர்ந்து வருகிறது. ஷான்பாஷா இரவு நேரங்களில் மட்டும் அந்த குழந்தையை தன்னுடன் வைத்துக்கொள்வதை வழக்கமாக கொண்டார்.
சில நாட்களுக்கு முன்னர் ஷான்பாஷா மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தன்னுடைய 5 வயது மகள் என்றும் பாராமல் குழந்தையிடம் பாலியல் தொந்தரவுகளை செய்து வந்துள்ளார். வழக்கம்போல மறுநாள் காலையில் அந்த குழந்தை அத்தை வீட்டிற்கு சென்றபோது வலியால் துடித்து அழுதுள்ளது.
உடனடியாக உறவினர்கள் குழந்தையை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையின் தந்தையான ஷான்பாஷாவிடம் விசாரனை நடத்தினர். அப்போது தான் செய்த குற்றத்தை ஷான்பாஷா ஒப்புக்கொண்டுள்ளார்.
உடனடியாக காவல்துறையினர் அவரை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.