திருமணம் செய்துகொடுத்த மகனின் பிரிவை தாங்கிக்கொள்ள இயலாத தங்கை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி கணவன் வீட்டுக்கு சென்ற மகள்! சோகத்தில் பாசக்கார தந்தை எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சி சம்பவம்!
மதுரை மாவட்டத்தில் சையத் இப்ராஹிம் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகளின் பெயர் ஃபாத்திமா பீவி. தந்தைக்கு மகள் மீதும், மகளுக்கு தந்தை மீதும் எப்பொழுதும் அளவு கடந்த பாசம் இருந்தது. திருமண வயதை எட்டியதால் சென்ற மாதம் ஃபாத்திமா பீவிக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
திருமணம் முடிந்தவுடன் ஃபாத்திமா பீவி தன் புகுந்த வீட்டுக்கு சென்றுவிட்டார். மகள் தாங்களே பிரிந்த சோகத்தை பெற்றோரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. தினமும் வீட்டில் முடங்கி அழுது கொண்டிருந்தனர். எப்பொழுதும் மகளை கண்ணுக்குள் வைத்து காத்துக்கொண்டிருந்த சையத் இப்ராஹிம், தன் மகளின் பிரிவினால் மனமுடைந்தார்.
26-ஆம் தேதியன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து சையது இப்ரஹிம் தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சைவத் சுயநினைவை இழந்து கிடந்ததை கண்டு அதிர்ந்தனர்.
உடனடியாக அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. துரதிஷ்டவசமாக நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை கேட்டவுடன் ஃபாத்திமா பீவி விண்ணை பிளக்கும் அளவிற்கு அழுதார்.
இந்த சம்பவமானது மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.