சக கிரிக்கெட் வீரருடன் பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு தகாத உறவு! தினேஷ் கார்த்திக்கை போல் பாதிக்கப்பட்ட இன்னொரு வீரர்!

பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் மற்றொரு வீரரின் மனைவியை திருமணம் செய்திருக்கும் சம்பவமானது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரத்னே தில்ஷான். இவர் இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு முக்கிய வீரராக திகழ்ந்தவர். 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையை கொண்டவர். இவர் சில ஆண்டுகள் இலங்கை அணியின் கேப்டனாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இவர் ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு விளையாடியது அனைவரும் அறிந்ததே.

இவருடைய முதல் மனைவியின் பெயர் நிலாங்கா. இத்தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் நிலாங்காவுக்கும் தில்ஷானுக்கும் கல்யாணமாகிய சில ஆண்டுகளில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன. குடும்பத்தினருக்கும் வட்டாரங்கள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியிட்டனர்.

நிலாங்கா,  தில்ஷானின் சக வீரரான உபுல் தரங்காவுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினார். இந்த நெருக்கமானது பிற்காலத்தில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் தில்ஷான் மிகவும் மனமுடைந்து நிலாங்காவை விவாகரத்து செய்தார். இந்த விவாகரத்திற்காக அவன் தன் மனைவிக்கு மாதந்தோறும் 20,000 அமெரிக்க டாலர்களை நஷ்ட ஈடாக வழங்குகிறார்.

விவாகரத்து பெற்ற பின்னர் நிலாங்கா சர்ச்சைக்கு ஏற்றவாறே உபுல் தரங்காவை திருமணம் செய்து கொண்டார். தில்ஷான் 2008-ஆம் ஆண்டில் இலங்கை நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு மொத்தம் 4 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியானது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்ஷானின் கதை போன்றே இந்திய கிரிக்கெட் அணியிலும் நிகழ்ந்துள்ளது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கின் முதல் மனைவி அவரை விவாகரத்து செய்து சக வீரரான முரளி விஜய்யை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.