வயது வெறும் 20 தான்! 3வது மாடியில் இருந்து நள்ளிரவு குதித்த இளம் நடிகை! அதிர வைக்கும் காரணம்!

பிரபல இந்தி நடிகை மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுமுக பாலிவுட் நடிகைகளுள் ஒருவர் பேர்ல் பஞ்சாபி. இவருடைய வயது 20. ஓஷிவாரா லோகண்ட்வாலா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அவருக்கு துணையாக அவருடைய தாயார் வசித்து வந்தார்.

நெடுநாட்களாக அவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டார். இதுகுறித்து அவரது தாயார் பலமுறை கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. 

இதேபோன்று நேற்றிரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ‌பேர்ல் வீட்டு மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.  

ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சம்பவமறிந்த காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

ஏற்கனவே 2 முறை அவர்‌ தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.