நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான சமூக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்பதற்கும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும் "மீ டூ" (me too) இயக்கம் தொடங்கப்பட்டது.
#mentoo! உடலை காட்டி பணம் பறிக்கும் பெண்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்த ஆண்கள்!

பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய இந்த நல்லிணக்கத்தை சிலர் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்துகின்றனர். இது சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆண்கள் சிலர் ஒரு குழுவாக இணைந்து ஆண்களை பாதுகாப்பதற்காக "மென் டூ" (men too) என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளனர். அதாவது ஆண்களை பழிதீர்க்கும் நோக்கில் பெண்கள் ஈடுபடும் போது, சம்பந்தப்பட்ட ஆண்களை காப்பதற்கு இந்த இயக்கம் உதவிடும்.
சமீபத்தில் பாலியல் குற்றவழக்கில் கைது செய்யப்பட்ட நடிகரின் நண்பர்கள் துவங்கியுள்ளனர்.நடிகர் கரண் ஓபராய் மீது பெண்ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து, அவரது நண்பர்கள் சிலர் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் புகார் அளித்த பெண்ணும் தங்கள் நண்பரும் காதலித்து வந்ததாகவும், இருவரும் பிரிந்த நிலையில் தற்போது பொய்ப்புகார் அளித்துள்ளதாகவும் கூறினர்.
மேலும் சமீப காலமாக ஆண்களுக்கு எதிராக பணம் பறிக்கும் நோக்கில் போலி பாலியல் குற்ற வழக்குகளை பெண்கள் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டிய அவர்கள், இதுபோன்ற போலி வழக்குகள் சிலவற்றில் உயர்நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டினர். போலிக்குற்றச்சாட்டுகளை சுமத்தி, சட்டத்தை தவறாக பயன்படுத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மென் டூ இயக்கத்தை தொடங்கிய அக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.