பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட காரணத்தை அவருடைய ஒப்பனை கலைஞர் வெளியிட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாரும் அவருக்கு உதவி செய்யவில்லை..! தோனி நடிகர் தற்கொலைக்கான உண்மையான காரணத்தை வெளியிட்ட அவருக்கு நெருக்கமான பெண்மணி!

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சுஷாந்த் ராஜ்புத். இவர் எம்.எஸ்.தோனி திரைப்படத்தில் தோனியாக நடித்திருந்தார். முதலில் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கிய இவர் பின்னர், "காய் போச்சே" என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் ரசிகர்களிடையே பிரபலமானார். பாலிவுட் நடிகர்களில் சமூக வலைதளங்களில் அதிக பார்வையாளர்களை கொண்டவர்களில் இவரும் ஒருவர். இவருடைய வயது 34.
இந்நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இன்று மதியம் அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இன்று பிற்பகல் அவருடைய வீட்டில் இருந்து காவல்துறையினர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நேற்று தற்கொலை செய்வதற்கு முன்னர் சுஷாந்த் சிங் ராஜ்புத், நேற்று முன்தினம் இரவு தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு வீட்டிலேயே பார்ட்டி கொடுத்துள்ளார். இதற்கு அவர் அனைத்து நண்பர்களையும் அழைக்கவில்லை. குறிப்பிட்ட சிலரை மட்டுமே அவர் அழைத்திருந்தார். மேலும் முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் சிலரையும் அவர் அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது
நேற்று அதிகாலை 3 மணி வரை பார்ட்டியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின்னர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர் அவருடைய வீட்டிற்கு சென்றுவிட்டனர். சுஷாந்த் சிங் ராஜ்புத் தன்னுடைய அறைக்கு சென்று உறங்க தொடங்கிவிட்டார். நேற்று காலையில் வீட்டு வேலை செய்பவர்கள் வீடு முழுவதையும் சுத்தம் செய்துவிட்டு சுஷாந்த் அறைக்கு சென்றுள்ளனர். ஆனால் கதவு மூடப்பட்டிருந்ததால், அவர்களை பின் உறங்கி கொண்டிருப்பதாக நினைத்திருந்தனர்.
மதியம் ஆகியும் அவர் அறையை விட்டு வெளியே வராததால் பணியாளர்கள் சந்தேகித்துள்ளனர். உடனடியாக சுஷாந்த் சிங் ராஜ்புத் உறவினர்கள் அவருடைய வீட்டிற்கு வந்து கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போதுதான் அவர் படுக்கையில் சடலமாக இருந்ததை கண்டு அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதன்பிறகு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் இறந்த செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலானது. பிரதமர் நரேந்திர மோடி முதல் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இவருடைய மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்களை அவருடைய சிகை அலங்கார நிபுணரான சப்னா பாவ்னானி கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. "கடந்த சில ஆண்டுகளாகவே சுஷாந்த் மிகவும் கடினமான நாட்களை எதிர்கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரை தேற்றுவதற்கோ, உதவுவதற்கு எவரும் முன்வரவில்லை. திரைப்படத்துறையின் உறவுகள் அல்லது நட்பு என்பது அவ்வளவு ஆழமானது கிடையாது" என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2019-ஆம் ஆண்டில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்கவிருந்த 5 படங்கள் கைவிடப்பட்டன. அப்போதிலிருந்தே அவர் மிகுந்த மனவேதனையில் அவதிப்பட்டு வந்தார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இவருடைய மறைவானது இந்திய திரையுலகத்தின் மிகப்பெரிய இழப்பு என்று கூறினால் அது மிகையாகாது.