அடுத்தடுத்து 7 படங்களில் இருந்து நீக்கம்..! கட்டம் கட்டிய மிகப்பெரிய ஹீரோ..! சுஷாந்த் மரணத்தில் நீடிக்கும் மரணம்! பகீர் திருப்பம்!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் ராஜ்புத்தின் மரணத்திற்கு காரணம் என்று பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவமானது ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சுஷாந்த் ராஜ்புத். இவர் எம்.எஸ்.தோனி திரைப்படத்தில் தோனியாக நடித்திருந்தார். முதலில் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கிய இவர் பின்னர், "காய் போச்சே" என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் ரசிகர்களிடையே பிரபலமானார். பாலிவுட் நடிகர்களில் சமூக வலைதளங்களில் அதிக பார்வையாளர்களை கொண்டவர்களில் இவரும் ஒருவர். இவருடைய வயது 34.

இந்நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன்னர் மதியம் அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அன்று பிற்பகல் அவருடைய வீட்டில் இருந்து காவல்துறையினர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்வதற்கு முன்னர் சுஷாந்த் சிங் ராஜ்புத், அதற்கு முந்தைய இரவில் தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு வீட்டிலேயே பார்ட்டி கொடுத்துள்ளார். இதற்கு அவர் அனைத்து நண்பர்களையும் அழைக்கவில்லை. குறிப்பிட்ட சிலரை மட்டுமே அவர் அழைத்திருந்தார். மேலும் முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் சிலரையும் அவர் அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுநாள் அதிகாலை 3 மணி வரை பார்ட்டியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர் அவருடைய வீட்டிற்கு சென்றுவிட்டனர். சுஷாந்த் சிங் ராஜ்புத் தன்னுடைய அறைக்கு சென்று உறங்க தொடங்கிவிட்டார். அன்று காலையில் வீட்டு வேலை செய்பவர்கள் வீடு முழுவதையும் சுத்தம் செய்துவிட்டு சுஷாந்த் அறைக்கு சென்றுள்ளனர். ஆனால் கதவு மூடப்பட்டிருந்ததால், அவர்களை பின் உறங்கி கொண்டிருப்பதாக நினைத்திருந்தனர்.

மதியம் ஆகியும் அவர் அறையை விட்டு வெளியே வராததால் பணியாளர்கள் சந்தேகித்துள்ளனர். உடனடியாக சுஷாந்த் சிங் ராஜ்புத் உறவினர்கள் அவருடைய வீட்டிற்கு வந்து கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போதுதான் அவர் படுக்கையில் சடலமாக இருந்ததை கண்டு அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதன்பிறகு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் இறந்த செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலானது. பிரதமர் நரேந்திர மோடி முதல் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இவருடைய மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மன அழுத்தத்தால் உயிரிழந்தார் என்று அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. 

அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய குடும்பத்தினர் கூறியிருந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடைய  இறுதி சடங்குகள் 2 நாட்களுக்கு மும்பையில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பிரபல பாலிவுட் நடிகர்களான சல்மான் கான், கரன் ஜோகர், சஞ்சய் லீலா பன்சாலி, ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேர் மீது சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலைக்கு காரணமானவர்கள் என்று பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதாவது சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்கவிருந்த 7 திரைப்படங்களின் வாய்ப்புகளை இவர்கள் தட்டிப்பறித்து விட்டனர் என்றும், அந்த மன விரக்தியில் தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் வழக்கறிஞர் சார்பில் கூறப்படுகிறது. இந்த செய்தியானது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.