விவசாய நிலத்தில் கால் வைத்த மறு நொடி..! அப்படியே விழுந்து இறந்த விவசாயி! நெஞ்சை பதற வைக்கும் காரணம்!

மின்கம்பியை மிதித்த விவசாயி ஒருவர் இறந்துள்ள சம்பவமானது பட்டுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பட்டுக்கோட்டை அருகே பண்ணைவயல் சாலை என்னும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் நைனாகுளம் என்னுமிடத்தில் நிலத்தை  குத்தகை எடுத்து கருப்பையா என்ற 50 வயது முதியவர் விவசாயம் நடத்தி வந்துள்ளார். 

வழக்கம்போல அவர் நேற்று இரவு விவசாய வேலைகளை பார்த்து வந்துள்ளார். அப்போது அறுந்து கிடந்த மின்வயரை காணாது கருப்பையா அதன் மீது காலை வைத்துள்ளார். உடனடியாக மின்சாரம் அவருடன் முழுவதிலும் தாக்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கருப்பையா உயிரிழந்தார். 

சம்பவம் அறிந்த பொதுமக்கள் விரைந்து வந்து மின் ஊழியர்களை அணுகி மின்சாரத்தை துண்டித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கருப்பையாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.