காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், முத்தியால்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள கழிவுநீர் பாதாள சாக்கடையை 20.8.2020 அன்று சுத்தம் செய்வதற்காக இறங்கும் போது திரு. வி. லட்சுமணன் மற்றும் இவரை காப்பாற்றச் சென்ற திரு. சுனில் ஆகிய இருவரும் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.
தமிழக முதல்வர் விஷவாயு தாக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்..

இச்சம்பவத்தில் உயிரிழந்த திரு. லட்சுமணன் மற்றும் திரு. சுனில் ஆகிய இரண்டு நபர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.