தினமும் என் மனைவி டெய்லர் கூட என்ன பண்றா? கண்டுபிடிக்க கணவன் எடுத்த பகீர் முடிவு! அதிர்ச்சியில் பிள்ளைகள்!

மனைவியின் நடத்தையில் சந்தேகித்த கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரியில் திலாஸ்பேட்டை வேலன் தோட்டம் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட காந்திநகர் என்னுமிடத்தில் குடியரசு மணி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 34. இவருடைய மனைவியின் பெயர் மாதவா. மாதவாவின் வயது 30. இவர் டெய்லர் கடையில் பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியினருக்கு சஞ்சய் என்ற 10 வயது மகனுள்ளான்.

குடியரசுமணி மாதவாவின் நடத்தையில் தொடர்ந்து சந்தேகித்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த வண்ணம் உள்ளது. மேலும் குடியரசுமணிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. ஆகையால் அடிப்படை கணவனும் மனைவியும் சண்டையிட்டு கொள்வதை வழக்கமாக கொண்டனர். 

சம்பவத்தன்று குடியரசு மணி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மாதவாவுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளார். அவர்கள் வீட்டின் மாடியில் வாடகைக்கு இருப்போர் சமாதானம் செய்து வைக்க முயற்சித்த போதிலும் எந்தவித பயனும் இல்லாமல் போனது.

இறுதியில் மாதவா தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள தன் தாய் வீட்டிற்கு அழுதுக்கொண்டே சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த குடியரசுமணி இரவு 11 மணியளவிற்கு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் அறிந்து மாதவா மற்றும் சஞ்சய் அலறியடித்துக்கொண்டு கணவர் வீட்டுக்கு வந்தனர். குடியரசு மணியை மீட்டர் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது