குழந்தைக்கு ரத்தப் பரிசோதனை அவசியமா ??

குழந்தை பிறந்த மூன்று தினங்களுக்குள் ஒரு சிறப்பு ரத்த பரிசோதனை செய்வது மிகவும் அவசியமான செயலாக கருதப்படுகிறது. குழந்தையின் குதிகாலில் இருந்து ரத்தத்துளி எடுத்து செய்யப்படும் இந்த பரிசோதனையில் கீழ்க்கண்ட பிரச்னைகளை கண்டறியமுடியும்.


·         இருப்பதை ரத்தப்பரிசோதனையில் கண்டறிந்தால் உடனே சிகிச்சை தொடங்கி மூளை வளர்ச்சியின்மையை போக்கலாம்.

·         அட்ரீனலில் குறைபாட்டை கண்டறிந்து சிகிச்சை செய்தால் ஹார்மோன் உற்பத்தியை போதிய அளவு அதிகரிக்க முடியும்.

·         என்சைம் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால்போதிய ஊட்டச்சத்து கொடுத்து கண் பிரச்னை மற்றும் மன வளர்ச்சி குறையை நீக்கலாம்.

·         தொற்றுநோய் பாதிப்பு அல்லது ஜீன் குறைபாடு இருப்பதையும் ரத்தப்பரிசோதனையில் கண்டறிந்தால், முன்கூட்டியே குணப்படுத்த இயலும்.

குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்போது ரத்தப்பரிசோதனை செய்வது தேவையில்லை என்று நினைக்கக்கூடாது. ஏனெனில் அனைத்து நோய்களும் வெளியே தெரிவதில்லை. அதனால் ரத்தப்பரிசோதனை மூலம் முழு ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதுதான் குழந்தைக்கு நல்லது