சாப்பிட்டதும் எதற்காக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலந்து போடுறாங்க தெரியுமா?

சாப்பிட்டதும் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலந்து தாம்பூலம் போடுவது தமிழர் பழக்கம். பாக்கில் இருக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்கிறது. சுண்ணாம்பு காரம் வாத நோய்களை போக்குகிறது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்குகிறது.


இதுதவிர, தாம்பூலத்தில் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவற்றை சேர்க்கும்போது, வாயில் உள்ள கிருமிகளை அழித்து ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

·     தாம்பூலம் போடும் பழக்கம் உள்ளவர்களுக்கு போதிய கால்சியம் சத்து கிடைப்பதால் எலும்பு பலம் அடைகிறது. எலும்பு முறிவு, எலும்பு மெலிவு போன்ற பிரச்னைகள் குறையும்.

·         ஜீரண சக்தியை மேம்படுத்தும் தன்மைகள் தாம்பூலத்தில் உள்ளது. அதனால் சாப்பிட்ட உணவு விரைவில் செரிக்கிறது.

·         நரம்பு சுறுசுறுப்புக்கும் மூளை புத்துணர்ச்சி அடைவதற்கும் தாம்பூலம் உதவிகரமாக இருக்கிறது.

·         நெஞ்சில் கபம், இருமல் போன்ற பிரச்னைகளை கட்டுப்படுத்தும் தன்மையும் தாம்பூலத்துக்கு உண்டு.

தாம்பூலம் போடுபவர்கள் எந்தக் காரணம் கொண்டும் புகையிலை சேர்க்கக்கூடாது. மேலும் நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே தாம்பூலம் உபயோகிக்க வேண்டும்.