குழந்தைக்கு மசாஜ் செய்யத் தெரியுமா?

சின்னக் குழந்தைகளை குளிப்பாட்டும் நேரத்தில் மசாஜ் செய்வது இன்னமும் சில வீடுகளில் பழக்கமாக இருக்கிறது. குழந்தைக்கு மசாஜ் செய்வது மருத்துவரீதியில் சரியான பழக்கம் என்றாலும், முறையாக செய்யவில்லை என்றால் குழந்தைக்கு ஆபத்து உண்டாகலாம்.


·         குழந்தை தவழும் காலம் வரை மட்டுமே மசாஜ் செய்வது பலன் தருவதாக இருக்கும்.

·         குழந்தை மிகவும் சோம்பலாக இருந்தால், தூக்கம் வராமல் தவித்தால் மசாஜ் செய்வது நல்லமுறையில் பயனளிக்கும்.

·         பால் குடித்தவுடன் அல்லது தூக்கம் வரும்போது குழந்தைக்கு மசாஜ் செய்யக்கூடாது.

·         குழந்தை விளையாடும் மனநிலையில் இருப்பது தெரிந்தால் கால், கைகள், முதுகு பகுதிகளை மிகவும் மெதுவாக நீவிவிடலாம்.

மசாஜ் செய்வதால் ஏதேனும் அசெளகரியம் ஏற்படுவதாக குழந்தை உணர்ந்தால் அல்லது வலி ஏற்பட்டு அழுதால் உடனடியாக மசாஜ் செய்வதை நிறுத்திவிட வேண்டும். அழுகை தொடரும்பட்சத்தில் மருத்துவரை சந்திக்கவேண்டியது அவசியம்.