மாதவிடாய் கோளாறுகளை அருகம்புல் எப்படி தீர்க்கும் தெரியுமா??

விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் அணிவிப்பதன் நோக்கம் என்ன தெரியுமா? அதை சாக்காக வைத்தாவது அருகம்புல் பறிக்கும் மனிதர்களுக்கு அதன் மருத்துவ தன்மைகள் தெரியவரும் என்பதுதான். அதனால்தான் இன்று அதிகாலை வாக்கிங் செல்லும் இடமெல்லாம் அருகம்புல் ஜூஸை பார்க்கமுடிகிறது.


ஜீரணக்கோளாறுக்கு மிகவும் நல்லது. அதனால் உடல் எடை குறையவும் நரம்புத்தளர்ச்சி நீங்கவும் பயன்படுகிறது. வயிற்று வலி, நீர்க்கடுப்பு போன்ற பிரச்னைகள் நீங்கவும் செய்யும். தோலில் ஏற்படும் சகல பிரச்னைகளுக்கும் அருகம்புல் நல்ல மருந்து. 

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மை வெளியேற்றுவதிலும் திறமையானது. சுத்தம் செய்த அருகம் புல்லை இடித்து பிழிந்து சாற்றை ஒரு டம்ளர் தினமும் காலையில் குடித்து வர சிறுநீர் நன்றாக கழியும். உடல் வீக்கம் குறையும். வயிற்றில் தங்கியுள்ள நஞ்சுகள் நீங்குகிறது. ரத்தம் சுத்தமடைகிறது.

வேரை நசுக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டி குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் குளறுபடிகள் சரியாகும்.  மனச்சோர்வு, தூக்கமின்மை, வலிப்பு ஆகியவற்றுக்கும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகிறது.