குழந்தைக்கு இதயத்தில் பிறவிக் குறைபாடு ஏன் வருகிறதுன்னு தெரிஞ்சுக்கோங்க…

கையளவு இதயத்தின் தாள லயமான சங்கீத ஒலிதான் 'லப்டப்... லப்டப்!’ நாளன்றுக்கு லட்சம் முறைக்கு மேல் துடிக்கிறது நம் இதயம்.. நாம் உறங்கினாலும், விழித்திருந்தாலும், சும்மா இருந்தாலும், சுறுசுறுப்பாக வேலை செய்தாலும் இடைவிடாது துடிப்பது இதயம் ஒன்றுதான். இதயம் நன்கு செயல்பட்டால்தான், உடலின் அனைத்து உறுப்புகளும் நல்ல நிலையில் இருக்கும்.


சில குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே இதயத்தில் கோளாறு இருப்பது உண்டு. அதற்குக் காரணம் தெரியுமா?

நெருங்கிய சொந்தங்களுக்கிடையே திருமணம் செய்வதுதான் மிகமுக்கிய காரணமாக கருதப்படுகிறது. அத்தை மகன், மாமன் மகள் என மிகவும் நெருக்கமான உறவுக்குள் திருமணம் முடிப்பவர்களுக்குக் குழந்தை பிறக்கும்போது இதயத்தில் கோளாறு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

இதுதவிர  கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு  ஏற்படும் நோய்கள் முக்கிய காரணமாக இருக்கிறது. சாதாரண சளி, காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவர் பரிந்துரைக்காமல் சாப்பிடும் மருந்துகள்  கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவையே  பிறவியிலேயே குழந்தைக்கு இதயக் கோளாறு  ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள். ஆகும்.