ஆண் நண்பருடன் எடுத்த புகைப்படங்கள்! திடீரென வெளியிட்ட லாஸ்லியா! அதிர்ச்சியில் கவிலியா ஆர்மி!

பிரபல பிக்பாஸ் நடிகை தன் ஆண் நண்பருடன் வெளியிட்டுள்ள புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


பிக்பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக சில வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்த சீசனின் டைட்டில் பட்டத்தை முகென் தட்டி சென்றார். இந்த சீசனில் பல்வேறு நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அவற்றுள் ஒன்று கவின் மற்றும் லாஸ்லியா இடையே இருந்த நெருக்கம்.

இருவரும் மிகவும் நெருக்கமாக பிக்பாஸ் வீட்டில் வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனை இருவருடைய ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வைரலாக்கினர். இதனிடையே நிலைமை கையை விட்டு செல்வதற்குள், லாஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டில் சென்று இருவரையும் கண்டித்தார். மேலும் காதலுக்கு இடைவெளி தருமாறும் அறிவுறுத்தி வந்தார்.

அதன் பின்னர் தற்போது வரை இருவரும் நெருக்கமாக பேசி கொள்வதில்லை. இந்த மாதத்தில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக லாஸ்லியா தன்னுடைய நண்பர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். ஆண் நண்பருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை அவர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த சம்பவமானது கவின் ரசிகர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சிலர் சமூக வலைத்தளங்களில் "இவ்வாறு புகைப்படம் போட்டால் கவின் மிகவும் நொந்து போவார். நீங்கள் சற்று கவினை நினைத்து பாருங்கள்" என்றும் கமெண்ட் செய்துள்ளனர்.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.