அதிமுக பேனரால் பலியான சுபஸ்ரீ! வேகமாக பரவும் தவறான தகவல்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

பேணர் விழுந்து சாலை விபத்தில் உயிரிழந்த மாணவியின் சார்பில் அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை பல்லாவரத்தையும், துறைபாக்கத்தையும் ரேடியன் சாலை இணைக்கிறது. இப்பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் இல்லத்திருமண விழா நடைபெற்று வருகிறது. இதற்காக சாலை முழுவதும் பேனர்கள் போஸ்டர்கள் என்றும் பிரம்மாண்டமாக அரங்கேற்றம் செய்யப்பட்டிருந்தன. நேற்று காலை இங்கு இருசக்கர வாகனத்தில் பி.டெக் படிக்கும் சுபஸ்ரீ என்ற மாணவி சென்று கொண்டிருந்தார்.

சாலையோரத்தில் அமைந்திருந்த பேனர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் சுபஸ்ரீ நிலைதடுமாறி நடுரோட்டில் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியது. 

இதில் அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். சம்பவமறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பரங்கிமலை புலனாய்வு காவல்த்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அனுமதியின்றி வைகக்ப்பட்டிருந்த பேணர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். மேலும் பல பேணர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தால் கலெக்டர் நடவடிக்கையெடுக்க திட்டமிட்டுள்ளனர். 

உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே பேணர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டால் தண்டனை விதிக்கப்படும் என்று உத்திரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அரசியல் கட்சியினர் பின்பற்றாமல் செயல்படுவதை பொதுமக்கள் கண்டித்து வருகின்றனர்.

சுபஸ்ரீ ஹெல்மெட் அணியாமல் வந்ததாக வதந்திகள் பரவி வரும் நிலையில், அவர் ஹெல்மெட் அணிந்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறான செய்திகளை வாட்ஸ்அப் மூலம் பரப்புவோருக்கு உரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருமண விழா நடத்திய அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பேணர்களை அச்சடித்த நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சியின் சார்பில் சீல் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.